விக்ரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்
Recommended Video
விழுப்புரம்: விக்ரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016ம் ஆண்டு வெற்றி பெற்றவர் ராதாமணி.
70வயதாகும் எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமானார்.
ராதாமணி எம் ஏ படித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேந்தவர் ஆவார் கலிஞ்சிக்குப்பம்தான் இவரது சொந்த ஊர். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் திமுக மாவட்ட அவைத் தலைவராக இருந்து வந்தார். மாவட்ட மூத்த திமுக பிரமுகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். திருமணம் செய்து கொள்ளாமல் திமுகவுக்காக உழைத்து வந்தவர் ஆவார். ராதாமணியின் மரணம் திமுக பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் ராதாமணி மரணம் காரணமாக விரைவில் விக்ரவாண்டி தொகுதியிலும், வசந்தகுமார் எம்பியாக மாறியதால் நாங்குநேரி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்துடன் வேலூர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.