விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.. சீமான் அறிவிப்பு
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டன. இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்பட போவதாக சோசியல் மீடியாவில் பரவிய புரளி.. ரிசர்வ் வங்கி மறுப்பு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் (புதுச்சேரி) தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் சமூக செயற்பாட்டாளரான கு கந்தசாமி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். நாங்குநேரியில் சா.ராஜநாராயணன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் இளங்கலை வரலாறு பட்டம் பெற்றவர் ஆவார். காமராஜர் நகரில் (புதுச்சேரி) பிரவினா மதியழகன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு(அக்குபஞ்சர்) படித்துள்ளார்.