பாத்ரூமில்.. பீர், பிராந்தி குடிக்கும் இளம் பெண்கள்.. வைரலாகும் வேதனை வீடியோ!
2 மாணவிகள் மது அருந்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: 2 இளம்பெண்கள் பாத்ரூமில் நின்றுகொண்டு தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னாபின்னமாகி விட்டன. பல உயிர்கள் பறிபோனாலும் மதுக்கடைகளை மூட முடியவில்லை.
மதுவினால் பல குற்றங்கள் அதிகரித்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இதற்காக போராட்டங்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்தான் அதிகமாகி வருகிறது.
#ReleaseNandhini நந்தினியை விடுதலை செய்.. இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
அசால்ட்
இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. அதிலும் கல்லூரி பெண்கள் இந்த விஷயத்தில் அசால்ட்டாக உள்ளே புகுந்து விளையாடுகிறார்கள்.
2 பெண்கள்
இணையத்திலும் இளம்பெண்கள் மது குடித்துவிட்டு, மது போதையில் தள்ளாடும் வீடியோக்கள் நிறைய உலா வருவதை காண முடிகிறது. தற்போது இது மாதிரி இன்னொரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் 2 கல்லூரி மாணவிகள் உள்ளனர். இருவருமே முதன்முதலாக குடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று தெரிகிறது.
பாத்ரூம்
யாருமில்லா அறை மற்றும் பாத்ரூமில் மதுபாட்டிலை திறந்து ஊற்றி குடிக்கின்றனர். இதில் ஒரு பெண் அப்படியே ராவாக அடிக்கிறார். பீர் பாட்டிலை உடைப்பதும், பிராந்தி பாட்டிலை திறந்து குடிப்பதும் என இந்த பெண்கள் செய்யும் காரியத்தை பார்த்தாலே வேதனையாகவும், பயமாகவும் இருக்கிறது.
கவலை
இந்த பெண்கள் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்!