மந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன? நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்!
தண்ணீர் பஞ்சம் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: குடிநீர் பிரச்சனை நம்மை ஆட்டிப்படைக்க, அரசாங்கத்திடம் இதுசம்பந்தமான கோரிக்கை மனு கொடுத்தவர்களின் கதி இதுதான் என்பதனை ஒரு சினிமா பட காட்சி மூலம் நெட்டிசன்கள் வாரி வறுத்தெடுத்து வருகிறார்கள்.
அந்த வீடியோ இதுதான்: அமைச்சர் வீட்டு வாசல் முன்பு கூட்டம் நிறைந்து வழிகிறது. அதில் ஒரு கிராமத்தை சேர்ந்த நான்கைந்து பேர் அமைச்சரிடம் கோரிக்கை மனுவுடன் நின்றிருக்கிறார்கள்.
வீட்டில் இருந்து அமைச்சர் வெளியே வருகிறார். ஒருவர், அவரிம், "இவங்க அத்திப்பட்டுக்காரவங்க.." என்று அறிமுகம் செய்ய, அமைச்சரோ என்ன விஷயம் என்று கிராமத்தினரிடம் கேட்கிறார். "எங்க கிராமத்துல குடிக்க கூட தண்ணி இல்லீங்க, மனுவுல எல்லாம் விவரமா எழுதியிருக்கோம்" என்கிறார்.
உடனே அமைச்சர் மனுவை வாங்கி உதவியாளரிடம், "பி.ஏ.. இதை கொஞ்சம் சீக்கிரமா கவனியுங்க" என்கிறார். பிஏவும், "கலெக்டர் சார் இதை கொஞ்சம் கவனியுங்க" என்று தருகிறார். கலெக்டர் அதை வாங்கி, "ஆர்டிஓ.. இதை கொஞ்சம் கவனிங்க.." என்று தருகிறார். ஆர்டிஓ அதை வாங்கி, "தாசில்தார் இதை கொஞ்சம் கவனியுங்க" என்கிறார்.
வாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்!
தாசில்தார் அதை கொண்டுபோய் தபேதாரரிடம் "இந்தாப்பா" என்கிறார். தபேதாரர் அந்த மனுவை வாங்கி தன் பாக்கெட்டில் வைத்து கொள்கிறார். அமைச்சரோ உடனே காரில் ஏறி கிளம்பி சென்றுவிடுகிறார்.
கொடுத்த மனு எங்கே போனது என்று தெரியாத கிராமத்தினரோ தங்களுக்குள், "மந்திரியே கவனிக்கறேன்னு சொல்லிட்டாரு.. நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்.. பொறவு என்ன? மகசர் போய் சேர வேண்டிய இடத்துல சேர்ந்துடுச்சு இல்லே" என்கிறார்.
தண்ணீர் தண்ணீர் படக் காட்சிதான்.. கண்ணீர் கண்ணீர் கதையும் கூட!