எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. எங்க வச்சு.. யாரை குளிப்பாட்டுறார் பாருங்க!
பாம்புக்கு சோப்பு போட்டு குளிக்க வைக்கும் நபரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே.. "உள்ளே திரியறது பல ரூபங்கள்.. அதெல்லாம் வெளியே நடமாட விட்டா பூமி தாங்காதேன்னு ஒரு ஓரமா படுக்க போட்டுருக்கோம்"ன்னு.. அப்படி ஒரு தில்லு பேர்வழிபோலதான் இந்த "தல"யை பார்த்தாலும் நமக்கு தெரியுது!
வீடியோ ஒன்று வைரலாகிறது.. எந்த ஊர், யார் இவர் என்று தெரியவில்லை. பாம்ரூமில் ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு.. சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளார். பக்கத்தில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் உள்ளது. கையில் சோப்பு உள்ளது.
சரி, துணிதான் துவைக்கிறார் போல இருக்கிறது என்று பார்த்தால்.. அவரது கையிலிருந்து நெளிந்து.. ஊர்கிறது! என்னவென்று பார்த்தால் அது ஒரு கருநாக பாம்பு!
சாதாரண பாம்புக்கே அள்ளு கிளம்பிவிடும் நமக்கு.. இவர் சோப்பை அந்த பாம்பு உடம்பு முழுவதும் தேய்த்து விடுகிறார். உடம்பெல்லாம் சோப்பு போட்டுக் கொண்டு இவர் தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்க, அந்த கருநாக பாம்பு தலையோ விசுக்கென தூக்கி கொண்டு நிற்கிறது.
எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா ..
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) October 15, 2019
நல்ல பாம்புக்கே சோப்பு போட்டு குளிப்பாட்டிட்டு இருக்காரு😜 pic.twitter.com/D4v0YC5Ldb
உள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்
நாம் ஒரு பாம்பை தான் குளிப்பாட்டுகிறோம் என்ற ஃபீலிங்கே அவர் முகத்தில் இல்லை. கொஞ்ச நேரத்தில் தூக்கி கொண்டு இருந்த அந்த தலையை அப்படியே பிடித்து, அதற்கும் சோப்பால் தேய்த்து விட்டு, பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து குளிப்பாட்டி விடுகிறார்.
வீடியோ பார்க்கும்போது நமக்கே ஒரு கிலி வந்துவிடுகிறது. நாம் இதுவரை பார்த்த பாம்பாட்டிகள் இப்படி செய்திருப்பார்களா என்று தெரியாது.. உண்மையிலேயே இந்த தலைக்கு தில்லுதான்!