‘எனக்கு இதுதான் குற்றால அருவி’.. சமையலறை குழாயில் குளித்து மகிழும் பறவை.. என்ன ஒரு பரவசம்!
சமையலறை குழாயில் குளிக்கும் பறவையின் வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை: பறவை ஒன்று ஒரு வீட்டின் சமையலறை குழாயில் குளித்து மகிழும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
பறவைகள் பலவிதம்.. அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்.. சமூகவலைதளங்ளில் தற்போது வைரலாகி இருக்கும் வீடியோவை பார்க்கும் போது இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
வெல்கம் டு நேச்சர் என்ற பெயரில் இயங்கும் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பறவை ஒன்று சமையலறை குழாயில் ஜாலியாக குளித்து மகிழ்கிறது. "என்னுடைய பறவைக்கு சமையலறை சிங்கில் குளிப்பது மிகவும் பிடிக்கும். அதற்காக அது ஏங்கி தவிக்கும். இந்த வீடியோவை பார்க்கும் போது உங்கள் முகத்தில் மகிழ்ச்சி புன்னகை தோன்றும் என நம்புகிறேன்", என குறிப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
சமையலறை சிங்கில் ஒரு தட்டை வைத்து அதில் பறவை விட்டிருக்கிறார் அதன் உரிமையாளர். குழாயில் இருந்து லேசாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏதோ குற்றாலம் அருவியில் குளிப்பது போல் பரவசத்துடன் அந்த தண்ணீரில் குளிக்கிறது அந்த பறவை.
இதை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உள்ளம் மகிழ்ந்துள்ளனர். பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கமெண்ட் செய்துள்ளனர்.