அட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல!
சென்னை: சுள்ளுன்னு அடிச்ச வெயில் கொஞ்சம் போல சுருங்கி வருது.. ஆனாலும் வெட்கை போகலை.. புழுக்கம் தாங்கலை..
போரடிச்சுப் போய் டிவிட்டர் பக்கம் ஒதுங்கியபோது கண்ணில் பட்ட குபீர் சிரிப்பு வீடியோ இது. சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது பக்கத்தில் இதை டிவீட் செய்திருந்தார். பார்த்ததுமே பக்கென சிரிப்பும்.. கூடவே சிலபல சிந்தனைகளும் வந்து ஓடின.
சாலையை கிராஸ் செய்கிறது ஒரு எருமை மாடு.. அது பாட்டுக்குத்தான் அது போய்க் கொண்டிருக்கிறது. அப்போது பைக்கில் இருவர் படு வேகமாக வருகின்றனர். எருமை மாட்டை கிராஸ் செய்து போகின்றனர்.
பேசாமல் போயிருக்கலாம்.. அதை விட்டுட்டு பின்னால் உட்கார்ந்திருந்த இளைஞன் அந்த மாட்டை தனது வலது காலால் பின்னால் எட்டி உதைக்கிறார். மாட்டுக்கு ஒன்னும் ஆகலை.. மாறாக, பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த நபர் இந்த ஜெர்க்கால் அதிர்ந்து குழம்பி தடுமாறி வண்டியை கொண்டு போய் லேம்ப் போஸ்ட்டில் விட்டு விடுகிறார்.
Karma has no menu.
— Susanta Nanda IFS (@susantananda3) May 25, 2020
It serves you what you deserve👍
And when it is instant..... pic.twitter.com/4HCGAn5iYy
இரண்டு இளைஞர்களும் கீழே விழுந்து புதையல் எடுக்கிறார்கள்.. செய்த வினை பின்னாடியே வந்து சேரும் என்பது பழைய மொழி... அதே வேகத்தில் ரிவிட் அடிக்கும் என்பது இந்த இளைஞர்கள் மூலம் கிடைத்த புதிய மொழி.. நிறையப் பேர் இப்படித்தான்.. தத்தமது வேலையை சரிவர செய்வதில்லை. அதை விட்டு விட்டு தேவையில்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதில்தான் மும்முரம் காட்டுவார்கள்.
தமிழகத்தில் 11 நாட்களில் 1000 கோடி.. டாஸ்மாக் மூலம் லாபம் பார்த்த அரசு
எந்த இடத்தில் எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கணும்.. அப்படி இல்லாமல் இப்படி தேவையில்லாத வேலையைச் செய்தால் இதேபோலத்தான் தேவையில்லாத அடியும் உதையும் கிடைக்கும். பேசாம போயிருக்கலாம்ல!
அந்த மாடு கரையேறிருச்சு.. நீங்க எப்பப்பா கரையேறப் போறீங்க!