சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விவேக்குக்கு ஏன் ஊசி போட்டீங்க".. வாயை கொடுத்த மன்சூர்.. பாய்ந்த புகார்.. முன்ஜாமீன் கோரி மனு!

முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார் மன்சூர் அலிகான்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் மன்சூர்...!

Recommended Video

    சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு.... முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான்!

    நடிகர் விவேக், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.. பிறகு மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்...

    விவேக் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது, செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.. அப்போது, தடுப்பூசி குறித்தும், அரசைக் குற்றம் சாட்டியும் ஆவேசமாக பேசியிருந்தார்.

    வீடியோ

    வீடியோ

    மன்சூர் அலிகான் பேசிய இந்த பேச்சு வீடியோவாக சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. கொரோனா பரவல் குறித்து மக்களிடையே விவேக் மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    கைது?

    கைது?

    இந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரை போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.. எனவே, நடிகர் மன்சூர் அலிகான், விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவலும் வெளியானது. .

    உள்நோக்கம்

    உள்நோக்கம்

    இந்நிலையில், மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் நான் சொன்னேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தன்னுடைய முன்ஜாமீன் மனுவில் மன்சூரலிகான் சுட்டிக்காட்டியுள்ளார்... இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Vivek death: Mansoor ali khan has filed a pre bail petition
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X