யப்பா.. சொக்கி போகும் அழகு.. சொடுக்கு போட்டு கேள்வி.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. பிக்பாஸ் கூத்து
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்
சென்னை: தேவதை போல உள்ளே என்ட்ரி ஆகி இருக்கிறார் அர்ச்சனா.. "எவன் அவன்" என்ற கேள்வியை கேட்கும் புரொமோ வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.
பொதுவாக ஒரு பிரபலம் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தபிறகு, அவரது செயல்பாடுகளால் மேலும் பிரபலமாகிறார்கள்.. அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி!
அவர்கள் பழகும் விதம், விட்டுக்கொடுக்கும் தன்மை, மற்றவர்களை அனுசரித்து போவது, விளையாட்டுக்களை சரியாக கவனம் செலுத்தி விளையாடுவது, மிக கடினமான சூழலிலும் வார்த்தைகளை சரியாக பயன்படுத்துவது, நிலவும் பிரச்சனைகளை நாசூக்காக கையாள்வது, இப்படி பல விதங்களில் போட்டியாளர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
இதை வைத்த உச்சத்துக்கும் போனவர்களும் உண்டு, ஏற்கனவே இழந்த மதிப்புகளை இழந்தவர்களும் உண்டு. அந்த வகையில் வீட்டிற்கு முன்புவரை அனிதா என்ற பெண் செய்தியாளர் பற்றி அவ்வளவாக தெரியாது.. இப்போதுதான் அவரது அறியாத பக்கங்கள் வெளியாகி வருகின்றன.. அதேபோலதான் மற்றவர்களும்!
கண்டன்ட் வேண்டும் என்பதற்காக இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், அது நல்ல பெயரை சம்பாதித்து தருமா என்பது தெரியவில்லை.. இந்த நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக ஜீ தமிழ் டிவி காம்பயர் அர்ச்சனா, என்ட்ரி ஆகி உள்ளார்.. இத்தனை வருஷமாக அர்ச்சனா நிதானமாக பேசி யாருமே பார்த்திருக்க முடியாது.. துறுதுறுவென லுக்... கடகடவென்று பேச்சு.. ஆன் தி ஸ்பாட்ட் கவுண்ட்டர்.. இதுதான் அவரது ஸ்பெஷலாட்டி. இது அத்தனையும் இப்போது பிக்பாஸ் வீட்டிற்கு தேவைப்படும். அர்ச்சனா வீட்டிற்குள் நுழையும் புரமோவும் வெளியாகி, ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்து வருகிறது.
அப்துல் கலாம் பிறந்த தினத்தை ஆன்லைனில் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்
இதேமாதிரிதான் கடந்த சீசனில் மீரா மிதுனை உள்ளே இறக்கினார்கள்.. அப்போது முதலே ரேட்டிங் சூடுபிடித்தது.. இப்போது அர்ச்சனாவை நிகழ்ச்சிக்குள் கொண்டு வருவதால், வீடு சிரிப்பில் மூழ்குமா? அல்லது சச்சரவில் கொந்தளிக்குமா? சுரேஷூக்கே டஃப் தருவாரா? அல்லது எல்லார் மனசிலும் இடம்பிடிப்பரா? என்பது இனிமேல்தான் தெரியும்!