"இது"தான் சித்ராவின் கடைசி படம்.. தலை நிறைய மல்லி பூ.. தழைய தழைய பட்டு சேலை.. முகம் முழுக்க சிரிப்பு
சித்ரா கடைசியாக எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: சித்ராவின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், அதுதான் சித்ரா சீரியலில் நடித்த கடைசி நாள், கடைசி காட்சி, கடைசி போட்டோ என்பதால்தான்!
சினிமா பிரபலம் அளவுக்கு சீரியலில் பிரபலமாகி இருக்கும் சித்ரா, மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளார்.
இதற்கு காரணம் வெறும் நடிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. காம்பியரிங், நடனம், மாடலிங் என மல்ட்டி திறமைகளை கொண்டவர் சித்ரா.
எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயமிக்கவர்.. மென்மையான சுபாவமும், அதில் உறுதியான பிடிப்பும் கொண்டவர்.. உழைப்பின் மேல் உயரிய மதிப்பை கொண்டவர்.. அதில் தன்னை நிரூபித்தும் காட்டியவர்.. அதனாலேயே தினம் தினம் சித்ராவின் பெயர் மீடியாவில் தொடர்ந்து அடிபட்டு கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் முழுவதும் விஜய் டிவியில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியின் புரோமோ இதயத்தை பிசைந்தெடுத்தது.. அந்த புரோமோவில் அவர் செய்யும் குறும்புத்தனங்களும், பாட்டும், டான்சும், கலகலப்பான அந்த முகமுமாய் இருந்தவரை பார்த்தவர்கள் அனைவருமே சோகத்தின் விளிம்புக்கு சென்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இன்னொரு போட்டோ வைரலாகி வருகிறது.. அதுதான் சீரியலில் அவர் கடைசியாக நடித்த காட்சியாம்.. இதுவரை சித்ரா நடித்த காட்சிகள் அனைத்தும் நாளையுடன் அதாவது 23-ம்தேதியுடன் முடிவடைய போகிறதாம்.. சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடுவதுதான் கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகளாம். அப்போதும் சித்ரா சிரித்தபடியே காணப்படுகிறார்.
அந்த ஷூட்டிங் நடக்கும்போது, பிரேக் நேரத்தில் வழக்கம்போல் சித்ரா சகநடிகர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.. அதில் ஒரு போட்டோவில் மீனா, மீனாவின் அம்மா இவர்களுக்கு நடுவில் உட்கார்ந்துள்ளார் சித்ரா.. அதே மல்லிகைப்பூ.. அந்த பூவைவிட மென்மையான சிரிப்புடன் சித்ரா போஸ் தருகிறார்..
மீனா அம்மாவின் கையை இறுக பற்றிக் கொண்டுள்ளார்.. சித்ரா எத்தனையோ போட்டோக்களை இதுவரை எடுத்திருந்தாலும், இது கடைசி போட்டோ என்பதால் இணையத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்