செஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக!
Recommended Video
சென்னை: எதுக்கு ஓவரா ஆட்டம் போடணும், எதுக்கு இப்படி நல்ல முடிவுக்காக காத்து கிடக்கணும்? அதிமுகவுக்கு வந்திருக்கிற நிலைமையை பார்த்தால் பெரிய பரிதாபமாக இருக்கிறது.
நாடு முழுவதும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணியில் இருந்தே ஒருவித பரபரப்பு தென்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல, அதிமுக கூட்டணி சற்று முன்பாக வந்த நிலவரப்படி பின்னடைவைதான் சந்தித்து வருகிறது.
ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவா இது? அதள பாதாளத்திற்கு சென்ற கட்சி.. இபிஎஸ் மோசமான சாதனை!
ஜெ. தந்த தெம்பு
பொதுவாக, தேர்தல் முடிவுகள் என்றால், காலை 9 மணிக்கே ஆட்டம், பாட்டம், என களை கட்டிவிடுவார்கள் தொண்டர்கள். அதிலும் பெண் தொண்டர்கள் புடவையை இழுத்து சொருகி டான்ஸ் ஆட ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா இருந்த தெம்பு!
லட்டுகள்
ஆனால் இவை எல்லாம் இப்போது அடங்கி காணப்படுகிறது. அதிமுக தரப்பிலோ கூட்டணி கட்சியினர் தங்களது முடிவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சும்மா இல்லை.. ஒரு தட்டில் லட்டு வைத்து காத்து கொண்டிருக்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு சேரில் ஜெயலலிதா படத்தை வைத்து, லட்டுவையும் வைத்து உள்ளனர்.
ஈயாடுகிறது
எப்போது நல்ல முடிவு வருகிறதோ, அடுத்த செகண்ட்டே ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ரேஞ்சில் காத்து உள்ளனர். வழக்கமான எந்த உற்சாகமும் இல்லாமல் உள்ளது சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகம். ஜெயலலிதா இருந்தபோதே, வாக்கு ஒரு பக்கம் எண்ண ஆரம்பிக்கும்போதே தொண்டர்கள், இன்று குவிய தொடங்குவார்கள். ஆனால் ஈயாடுகிறது தலைமை அலுவலகம்.
வெறிச்சோடியது
ஒரு களையும் இல்லை, ஆர்ப்பாட்டமும் இல்லை, ஆட்டம், பாட்டம், வெடி, கூத்து எதுவும் இல்லாமல், வெறிச்சோடி உள்ளது அதிமுக தலைமை! ஆளுக்கு ஒருகையில் செல்போன் வைத்து கொண்டு, தேர்தல் முடிவுகளை பார்த்து வருகிறார்கள். இதை அவ்வழியாக செல்பவர்கள் பரிதாபத்துடன் பார்த்து கொண்டு செல்கின்றனர். "கொஞ்சநஞ்சம் பேச்சா பேசினாங்க இந்த அமைச்சர் பெருமக்கள்" என்று அவர்களின் மைன்ட் வாய்சும் சேர்ந்து நம்மால் கேட்க முடிகிறது!