தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை மாற்ற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செயல்பாடு சந்தேகம் தருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 46 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டுள்ளதாக இன்று காலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தொல். திருமாவளவன் கூறியதாவது:
எதிர்க்கட்சிகள் யாரும் கோராமல் 46 வாக்குப்பதிவு மையங்களில் எதற்காக மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். தன்னிச்சையாக மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்ற அறிவிப்பு வியப்பு அளிக்கிறது. எனவே, இப்போதைய தலைமை தேர்தல் அதிகாரிக்கு பதில் வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில், தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 திருவள்ளூர், கடலூர், ஈரோடு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.