கொரோனாவில் குபீர் யோசனை.. என்னா ஒரு மூளை.. ஆளுங்களையே காய்னாக்கி.. சூப்பர் கேரம்.. சுப்ரீம் ஐடியா!
சென்னை: பாரம்பரிய விளையாட்டான கேரம்போர்டின் புதிய வெர்ஷனை ஒரு சிலர் லாக்டவுனில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். அதாவது அந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் காயின்கள், ஸ்டிரைக்கருக்கு பதிலாக ஆட்களை கொண்டு விளையாடுவதுதான் ஸ்பெஷாலிட்டியே.
Recommended Video
கேரம்போர்டு... இந்த விளையாட்டு இந்தியாவில் பிறந்த ஒரு விளையாட்டாகும். இது முதலாம் உலக போருக்கு பின்னர் மிகவும் பிரபலமடைந்தது. இந்த விளையாட்டை 2 அல்லது 4 பேர் (செட் சேர்த்து) விளையாடலாம்.
சதுர வடிவத்திலாலான பிளைவுட்டை கொண்டு இந்த விளையாட்டை விளையாடுவர். இது 29 இன்ச்கள் வரை இருக்கும். தற்போது பிளாஸ்டிக்களில் சிறுவர்கள் விளையாடும் போர்டுகளும் வந்துள்ளன.
ஸ்டிரைக்கர்
இந்த கேரம் போர்டில் மொத்தம் 19 காயின்கள் இருக்கும். 3 நிறங்களில் அவை இருக்கும். வெள்ளை, கருப்பு, சிகப்பு நிறம். இந்த வெள்ளையும் கருப்பும் விளையாடுவோர் எந்த நிற காயினை முதலில் போடுகிறார்களோ அதை எடுத்துக் கொள்வர். அது போல் சிகப்பு நிறமானது குயின் என அழைக்கப்படுகிறது. இந்த காயின்களை அடிக்க ஒரு ஸ்டிரைக்கரும் இருக்கும்.
4 வட்டம்
சரி இதெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என பார்க்கிறீர்களா. அது சரி, தற்போது டிக்டாக்கில் கேரம்போர்டு குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் காயின்களுக்கு பதிலாக ஆட்களை கொண்டு விளையாடுகிறார்கள். கேரம்போர்டு போல் சாக்பீசில் வரைந்து கொள்கிறார்கள். 4 மூலைகளிலும் 4 வட்டம் (காயின் விழும் இடம்) போட்டுள்ளனர்.
வட்டத்தில் விழுதல்
நடுவில் 4 பேரை நிற்க வைத்துள்ளனர். எதிரெதிரே ஒருவர் என இருவர் நின்றுக் கொண்டுள்ளனர். ஒருவரை ஸ்டிரைக்கராக பயன்படுத்துகிறார்கள். முதலில் இந்த ஸ்டிரைக்கர் நபரை ஒருவர் பிடித்து 4 பேர் மீது தள்ளுகிறார். அந்த 4 பேரில் ஒருவர் போய் 4 மூலையில் உள்ள வட்டத்தில் விழுகிறார்.
டிக்டாக்
அடுத்தது அந்த ஸ்டிரைக்கரை இன்னொருவர் 3 பேர் மீது தள்ளி விடுகிறார். இப்படியாக இந்த விளையாட்டு விளையடப்படுகிறது. 4 பேரையும் யார் மூலையில் உள்ள வட்டத்தில் தள்ளுகிறார்களோ அவரே வெற்றி பெற்றவர். இந்த வீடியோ டிக்டாக்கில் இருந்து ஷேர் செய்யப்பட்டது. இது வைரலாகி வருகிறது.