சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சம்ப்பில் தண்ணி வரலை.. தட்டிக் கேட்ட கணவன் மனைவிக்கு கத்திக் குத்து.. சென்னையில் ஷாக்!

குடிநீர் பிரச்சனையால் தம்பதியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சம்ப்பில் தண்ணி வரலை.. தட்டிக் கேட்ட கணவன் மனைவிக்கு கத்திக் குத்து..

    சென்னை: அடக்கொடுமையே... தண்ணி பிரச்சனை கடைசியில் கத்தி குத்து வரை வந்துவிட்டதே.. சம்ப்பில் தண்ணி இல்லை என்று புருஷன்-பொண்டாட்டி இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் எட்டி உதைத்ததுடன், வாய்-தாடைகளிலும் அடித்துள்ளார்!

    குடிநீருக்காக போராட்டம், மறியல் நடப்பது வழக்கம். இல்லையென்றால், குழாயில் தண்ணீர் பிடிக்க சண்டை வரும்.. ஆனால் சம்ப்பில் தண்ணி இல்லை என்பதற்காக தகராறு வருமா?

    சென்னையில் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதிலும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் இந்த கொடுமை அதிகரித்து வருகின்றது.

    சென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்! சென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்!

     அடுக்குமாடி குடியிருப்பு

    அடுக்குமாடி குடியிருப்பு

    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இப்போது தண்ணீர் பஞ்சம் என்பதால், இந்த காலனியில் உள்ளவர்கள் எல்லாரும் காசு போட்டுதான் தண்ணீரை விலைக்கு வாங்கி வருகிறார்கள்.

    மோட்டார்

    மோட்டார்

    இந்நிலையில் இங்கு குடியிருக்கும் மோகன் என்பவரின் வீட்டில் தண்ணி வரவில்லை. அதனால் மோட்டர் போட்டார். இதை பக்கத்து வீட்டுக்காரர் ஆதிமூலராமகிருஷ்ணன் பார்த்துவிட்டார். இவர் தமிழக சபாநாயகரின் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது. "சம்ப்பில் தான் தண்ணி இல்லையே.. எதுக்காக மோட்டர் போட்டே" என்று கேட்டுக் கொண்டே மோகனை எட்டி உதைத்துள்ளார் ஆதிமூலராமகிருஷ்ணன்.

    சுபாஷினி

    சுபாஷினி

    இதை பார்த்த மோகனின் மனைவி பதறியடித்து கொண்டு ஓடிவந்தார். எதுக்காக என் புருஷனை எட்டிஉதைத்தாய்? என்று கேட்டுள்ளார். உடனே ஆதிமூலராமகிருஷ்ணன் கத்தியை எடுத்து கொண்டு வந்து, சுபாஷினியின் வாய்தாடையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட கீழேவிழுந்தார் சுபாஷினி. உடனடியாக பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, 6 தையல் போட்டார்கள்,

    கைது

    கைது

    இந்த சம்பவம் குறித்து மோகன் சங்கர் நகர் போலீசில் புகார் தரவும், போலீசார் விரைந்து வந்து ஆதிமூலராமகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச்சென்றார்கள். நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்துக்கே, ஒரு தீர்வும் இன்னும் எட்டப்படாத நிலையில், இந்த பஞ்சத்தை வைத்து வரும் பஞ்சாயத்துகளுக்கு என்னதான் தீர்வோ!

    English summary
    A man has arrested for attacked a Couple for water Issue near Pallavaram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X