ஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் ஒரே நாளில் பெய்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து அடுத்த 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பருவமழை பொய்த்து போனது. இதனால் அடுத்தடுத்து மழை இல்லாததால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் பெரும் வறட்சி நிலவி வந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் வறண்டது. மக்களும் தண்ணீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அவதியடைந்தனர். இந்த நிலையில் 196 நாட்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக சென்னையில் மழை பெய்தது.
19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்!
கொட்டித் தீர்த்த மழை
அதுவும் வண்டியின் சீட்டுகள் நனையும் அளவுக்கே பெய்தது. எனினும் இதை மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
குடிநீர் பிரச்சினை
விடிய விடிய பெய்த மழையால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை சென்னையின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் அளவுக்கு பெய்துள்ளது.
தண்ணீர்
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பெய்த மழையால் 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது.
சோழவரம் ஏரி
தற்போது பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,245 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 347 கனஅடி நீரும், புழல் ஏரிக்கு 320 கனஅடியும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு 93 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.