சென்னையில் மட்டும் தான் தண்ணீர் பஞ்சம்.. வேறு எங்கும் இல்லை... ராஜன் செல்லப்பா சொல்கிறார்
Recommended Video
சென்னை: சென்னையை தவிர மற்ற பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இல்லை என மதுரை வடக்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் திமுக சார்பில் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார்.
அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை. தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் இணைய தங்கதமிழ்செல்வனுக்கு பச்சைக்கொடி.. ஜெயக்குமாரை தொடர்ந்து கடம்பூர் ராஜும் பேட்டி
இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது, மழை வேண்டி பரிகார பூஜை நடத்தப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
சென்னையை தவிர, தமிழகத்தின் எந்த பகுதியிலும் குடிநீர் பிரச்னை இல்லை எனவும் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டார். அரசியல் லாபத்திற்காக மட்டுமே, திமுகவினர் இந்த பிரச்னையை கிளப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை அறிய முடியாத சூழல் உள்ளது. ஒரே அதிகாரம் படைத்த ஒற்றை தலைமை தான் அதிமுகவுக்கு தேவை என இதற்கு முன்பு அவர் பேசியது அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.