நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்... சொல்கிறார் ஓபிஎஸ்!
சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
தவறான புகாரை வாபஸ் பெறாவிட்டால் அவதூறு வழக்கு.. ஆம் ஆத்மிக்கு கவுதம் கம்பீர் வார்னிங்!
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரை, அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் அவர் கூறினார். தேர்தல் ஆணையம் என்பது சுயேட்ச்சையான அமைப்பு என்றும், அதற்குரிய அதிகாரத்தின்படி செயல்படுவதாகவும் ஓ.பி.எஸ். பதிலளித்தார்.