நாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல
மதுரை: அதிமுகவில் இருந்து சென்றவர்கள் எங்கள் தலையில் இருந்து விழும் முடிக்கு சமம் என்று அமைச்சர் செல்லூர் ராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, அதிமுகவில் இருக்கும்போது எப்படி மதிக்கப்படுவார்கள், கட்சியை விட்டுச் சென்றுவிட்டால் அதன் பிறகு எப்படி கருதப்படுவார்கள் என்பதை, தலைமுடியுடன் ஒப்பிட்டு பதிலளித்தார்.
ரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்
மேலும், பதவிக்காக எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜு, நாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை என்றார்.
முன்னதாக, பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு முன்பு வரை திமுக தான் வெற்றி பெறும் என்று சொன்னவர்கள், தற்போது அதிமுக வெற்றி பெறும் என சொல்லி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். எனவே, அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.