தினகரனிடம் எங்கள் முடிவை தெரிவிப்போம்.. செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி
தினகரனிடம் ஆலோசனை நடத்திய பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனிடம் ஆலோசனை நடத்திய பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியானதே என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி குற்றாலத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், எங்கள் முடிவை தினகரனிடம் தெரிவிப்போம். தீர்ப்பு காரணமாக வருத்தம் இல்லை. நாங்கள் பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது.
நாங்கள் 18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம், எனினும் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் 18 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தவறான கருத்து.
மதுரையில் இன்று மாலை தினகரனுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யப்படும். எங்களின் எண்ணத்திற்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது, இந்த தீர்ப்பால் நாங்கள் வருத்தப்படவில்லை.
அதிமுகவை மீட்பதே எங்கள் நோக்கம். மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேர்தலில் நிற்க தயார் என்றுள்ளார்.