வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை... மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: இந்திய பெருங்கடல், அதை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
காற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாக்கிய உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், நாளை மறுநாள், தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
weather center has advised to fishermens Don't to go Sea because of the atmospheric pressure is Formed
Story first published: Wednesday, January 23, 2019, 13:45 [IST]