இந்த நான்கு மாவட்டத்தில் கனமழை அடித்து வெளுக்க போகுது.. வானிலை மையம் தகவல்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.
சென்னையிலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்திய வம்சாவளித் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த மாஜி அமைச்சருக்கு கிடைத்த பதிலடி- வைரல் வீடியோ
கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இந்த வார இறுதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வியாழன் தொடங்கி சனிக்கிழமை வரை சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
24 மணிநேரத்தில்
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர். இதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
நெல்லையில்
இதேபோல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எச்சரிக்கை
குமரி கடல் பகுதியில் 2 நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தங்களது அறிவிப்பில் கூறியுள்ளனர்.