ஆஹா சூப்பர்.. தமிழகத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் இன்று நல்ல மழை இருக்காம்!
சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட ஆறு மாவட்டங்களில், இன்று (செவ்வாய்) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை இந்தாண்டு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பசலனத்தால் மழைப்பொழிவு அவ்வப்போது இருக்கும்
ஆனால் கோடை மழை இந்தாண்டு பெரிதாக கைகொடுக்கவில்லை. தமிழகம் முழுவதுமே வறண்ட வானிலையே காணப்படுகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வருகிறார்கள். வெயிலும் 100 டிகிரியை தாண்டி அடித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடப்பதால் மக்களுக்கு வெயில் கொடுமையில் இருந்து கொஞ்சம் தப்பி உள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா: மிகமோசமான நிலையில் தோல் தொழில்.. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பேரபாயம்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சில தினங்களாக, வெப்பச் சலனத்தால் மழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியது.
இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.