தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் கணிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video
வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு நிலை நாளை தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன்பின் இந்த தாழ்வு மண்டலாமாக வேகமாக வலிமை பெற்று புயலாக மாறும். இது புயலாக மாறினால் அதற்கு கேட்டி (gati) புயல் என்று பெயர் வைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
ஆன்மீகமும் அரசியலும் கீரியும், பாம்பும் மாதிரி.. ஆப்போசிட்டா போகும்.. வேற யாரு.. சொன்னது ரஜினிதான்!
இன்று மழை
இந்தநிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும். சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
எங்கு மழை
கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூா், நாகப்பட்டினம், சேலம், காஞ்சிபுரம், வேலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இன்று மதியம் வரை இங்கு வெயில் அடிக்கும். அதை தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் மழை பெய்யாது.
சென்னை நிலை
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் இன்று பல இடங்களில் வெயில் கொளுத்தும். மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடுமையான வெயில் இருக்கும். 100 - 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருக்கிறது. சென்னையிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட வாய்ப்பு இருக்கிறது.
கடல் எப்படி
அதே சமயம் வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அங்கு உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். அரபிக்கடலில் மட்டும் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.