இன்று மாலை செம மழை இருக்கு.. சென்னையில் வானிலை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு!
தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் முறையாக மழை காலம் துவங்க உள்ளது. ஆனாலும் கூட இப்போதே தமிழகத்தில் ஆங்காங்கே தினமும் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
அதேபோல் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எப்போதும் மேக மூட்டத்துடன் காணப்படும் சென்னையிலும் இன்று மழை பெய்யும்.
ஆம் சென்னையில் சில பகுதிகளில் இன்று மாலை லேசான மழை பெய்யும். ஆனால் சென்னை முழுக்க இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள அணைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பி வருகிறது. தற்போது பெய்யும் மழை காரணமாக அணைகள் கொஞ்சம் வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளது. இது சில நாட்களுக்கு தண்ணீர் பிரச்சனையை கொஞ்சம் குறைக்கும்.
தற்போது கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் லேசாக மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்கு மேல் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, தேனி, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.