சென்னைக்கு மழை இருக்காதுன்னு சொன்னாங்க.. செம மழை! சென்னை மக்கள் ஹேப்பி!
சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு நாளைக்கு வறண்ட வானிலையே காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்படிருந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி, சேலம், நீலகிரி, தருமபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் நேற்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.
சென்னையில் வானிலை
அதேநேரம் சென்னையில் அடுத்த இரண்டு நாளைக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும்மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் மழை
இந்நிலையில் கணிப்புகளை மீறி இன்று சென்னையில் பரவலாக மழை பெய்தது. அசோக்நகர், வடபழனி, கே.கே.நகர், திருவல்லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கலில் மழை பெய்தது. இதேபோல் ஆதம்பாக்கம், ஆலந்தூர், தரமணி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
காற்று மாசு
இந்த மழையால் சென்னையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் காற்று மாசு குறையும் என்று சென்னைவாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாளுக்கு பிறகு
அண்மைக்காலத்தில் சென்னையில் மழை பெய்யாமல் இருந்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு மழை பெய்து வருவது சென்னை நகரத்தை மட்டுமல்ல, சென்னைவாசிகளையும் இந்த மழை குளிரவைத்துள்ளது. இந்த மழைக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்