குட் நியூஸ்.. நவ. 4 முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. 4 நாட்கள் நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. கடந்த 29-ஆம் தேதி முதல் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னோட்டமாக 28-ஆம் தேதி இரவு முதல் அதிகாலை வரை சென்னையில் கனமழை பெய்தது.
தினமும் இரவு நேரங்களில் மார்கழி மாதக் குளிர் போல் சென்னையில் நிலவி வருகிறது. இது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 4-ஆம் தேதி முதல் சென்னையில் நல்ல மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா பகுதி உட்பட 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
தினந்தோறும்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தென் தமிழகத்தில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது. ஆனால் நேற்று இரவு மதுரையில் கனமழை பெய்தது. மதுரையில் முதல் சென்சுரியாக 102 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து விரகனூரிலும் 102 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அரபிக் கடல்
அது போல் ராமநாதபுரத்தில் 71 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கு மழை குறையும். மேற்கு தமிழகமான கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை பெய்ய வேண்டுமானால் அரபிக் கடலில் கிழக்கு திசை காற்று உருவாகும்.
காற்றின் திசை
இல்லாவிட்டால் மேலடுக்கு சுழற்சி நிலவும். அதுவும் இல்லாவிட்டால் காற்றின் திசை மாறுப்பட்டு இடியுடன் கூடிய கனமழையை கொடுக்கும். மேலடுக்கு சுழற்சி வட தமிழக கடலோரம் அல்லது மத்திய வங்கக் கடலில் நிலவினால் கடலோர பகுதிகளுக்கு நல்ல மழை பெய்யும். கேரளாவுக்கும் நல்ல மழைப் பொழிவை கொடுக்கும். வரும் காலங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்கள்
அடுத்த மழை சென்னை மற்றும் 100 கி.மீ. தூரம் வரை உள்ள மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலோர தமிழகம், டெல்டா மாவட்டங்கள் ஆகிய இடங்களில் 4-ஆம் தேதி முதல் மழை பெய்யும். இந்த மழைக்கான மேலடுக்கு சுழற்சி இலங்கை கடலோரத்தில் தென்மேற்கு பகுதியில் உருவாகும். இதனால் புதுவை, காரைக்கால், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை கொடுக்கும். இந்த மழை 4 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.