பத்த வச்சு.. கொத்தி எடுத்து.. பிடித்து இழுத்து.. வெட்டி எறிந்து.. அட ஹேர் கட்டிங்தான் இது!
Recommended Video
சென்னை: சிகை அலங்காரம் செய்து கொள்ள கோடாரி, சுத்தியல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது என்றால் நம்புவீர்களா.
தொழில்நுட்பம் என்பது நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. அனைத்து விதத்திலும் புதுமை புது டெக்னிக் புகுத்தப்பட்டு வருகிறது.
வெறும், பிளேடு, கத்தரிகோல், ஷேவிங் கிரீம் கொண்டு செய்யப்பட்டு வந்த சிகை அலங்காரம், தற்போது புதுமையான முறையில் செய்யப்பட்டு வருகிறது. ஆம் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு கடையில் முடியை கொத்தி எடுத்தல் , வெட்டி எடுத்தல், கொளுத்தி விடுதல் என அத்தனை அம்சங்கள் உள்ளன.
இதற்கு கோடாரி, சுத்தியல், பாலிஷ் போடும் மிஷின் ஆகியன பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு ஏன் தலையில் நெருப்பை வைத்துக் கூட சிகை அலங்காரம் செய்யப்படுகிறது. தைரியமாக இருப்பவர்கள் மட்டுமே இதை செய்ய முடியும். நீங்களும் வீடியோவை பார்த்து என்ஜாய் செய்ங்க... இத பார்த்துவிட்டு ஏதாவது ஏடாகூடமா செய்து விட்டு முடி போனால் கம்பெனி பொறுப்பல்ல பாஸ்...
[ஜோடிகளே ஜோடிகளே இந்த ஹோட்டலுக்கு மட்டும் தயவு செய்து போய் விடாதீங்க! 310 அறையை புக் செய்யாதீங்க!]