தற்சார்பு பொருளாதாரத்துக்கு.. வேற எங்கேயும் போக வேணாம்.. கிராமத்துக்குப் போங்க
சென்னை: தற்சார்பு பொருளாதாரம் .. இதுதான் இப்போது மக்களிடையே அதிகம் புழங்கும் வார்த்தை.. உண்மையில் இது நமக்குப் புதுசு கிடையாது.. ஆனால் மறந்து போய் விட்டோம்.
கிராமங்கள் இன்று வரை தங்கள் சொந்தக் கால்களில்தான் நிற்கின்றன. யாரையும் நம்பி அந்த மக்கள் காத்திருப்பதில்லை. என்ன இருக்கிறதோ.. என்ன கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் தங்களது வாழ்க்கையை அழகாக ஓட்டிக் கொணுள்ளனர்.
ஆனால் நகரங்களில் பாருங்கள்.. எல்லாமே தலைகீழ்.. யாராவது எதையாவது நம்பித்தான் இங்கே ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள். கரண்ட் இல்லாவிட்டால் பதட்டமாகி விடுகிறோம்.. நெட் இல்லாவிட்டால் உயிரே போனது போல துடிக்கிறோம்.. வெயிலடிக்கிறதா.. உடனே கூல்டிரிங்ஸ்.. மழை வந்துருச்சா.. உடனே குடையை எடு.. கதவை மூடு. இப்படி ஆகி விட்டது நகர வாழ்க்கை.
பணம் படுத்தும் பாடு இருக்கே...! ஜெ.தீபா ஜெ.தீபக் இடையே மீண்டும் முட்டல் மோதல்
ஆனால் கிராமப்புறத்தில் பாருங்கள்... மழை பெய்தால் நனைகிறார்கள்.. வெயில் அடித்தாலும் காய்கிறார்கள். கரண்ட் இல்லாவிட்டால் மரத்தடி.. கேஸ் சிலிண்டர் இல்லாவிட்டால் விறகு.. எப்படி எளிமையான வாழ்க்கை.. இதுதான் உண்மையான தற்சார்பு.. இந்த வீடியவோவைப் பார்த்தால் அதை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது அதன் கருத்துக்கள்.
இந்த வீடியோவை உருவாக்கியவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். தற்சார்பு என்று எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். முதலில் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் மறந்தவற்றை, இழந்தவற்றை திரும்பக் கொண்டு வர வேண்டும். அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் எல்லாமே.. அதுதான் நாட்டின் சுய சார்பு பொருளாதாரத்திற்கும் மிகச் சிறந்தது. ஏதுவானது.
நல்ல வீடியோ நீங்களும் பாருங்க.