ஏன் திடீரென சீறினார் நித்யானந்தா சீடர்.. ஒன்னும் புரியலையே
நித்யானந்தா மீது ஆண் சீடர் புகார் அளிக்க என்ன காரணம்?
சென்னை: நித்யானந்தா மேல் சீடர் பரபரப்பு புகார் கூறியும் இதுவரை வாய் திறந்து அதற்கு பதிலளிக்காதது புதிராகவே உள்ளது.
வைரமுத்துவின் ஆண்டாள் விவகாரத்தில் சாமியார் உடையணிந்த ஒரு சீடர் அசிங்க அசிங்கமாக பேசி வீடியோவை வெளியிட்டிருந்தார். அதேசீடர்தான் இப்போது நித்யானந்தா மீது மீடூ புகார் அளித்துள்ளார்.
உல்லாசமாக இருந்தோம்.. கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தா.. தள்ளி விட்டேன்.. செத்துட்டா!
இப்போதான் தைரியம் வந்ததா?
இது தொடர்பான வீடியோவில் "அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" என்ற கருத்தை மனதில் வைத்து மக்களுக்கு ஒரு உண்மையை தெளிவுப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்து, "நான் நித்யானந்தா சாமியால 2014-ம் ஆண்டு மே மாதம் அனைவரின் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன், இதை சொல்ல எனக்கு இப்போதான் தைரியம் வந்தது" என்று சொல்லி முடிக்கிறார். கபளீகரம் செய்யப்பட்டதாக கூறிய அவர் மறக்காமல் நித்தியானந்தம் என்று சொல்லி தனது பேச்சை முடிப்பதுதான் பெரிய காமெடி.
ஏன் திட்ட வேண்டும்?
இந்த வீடியோ கடந்த 4 தினங்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. நித்யானந்தா மேல இருக்குற அளவு கடந்த அன்பு, பக்தியினால்தான் வைரமுத்துவை அப்படி திட்டி தீர்த்தார். ஆனால் சம்பவம் நடந்தது 2015-ல் என சீடர் சொல்கிறார். ஆண்டாள் விஷயம் இப்போது நடந்தது. 2015-ல் சீடர் கபளீகரம் செய்யப்பட்டிருந்தால் ஆண்டாள் விஷயத்தில் வாயே திறந்திருக்க மாட்டாரே? அப்படியே நித்யானந்தாவுக்கு ஆதரவாக பேசுவதானால் வேறு யாராவது பேசியிருப்பார்களே?
நித்யானந்தம்
கபளீகரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சீடரே எதற்காக வைரமுத்துவை திட்டியும், நித்யானந்தாவை ஆதரித்தும் வீடியோ வெளியிட வேண்டும்? அதேபோல, வைரமுத்துவை திட்டும் வீடியோவில் கடைசியாக நித்யானந்தம் என்று சொல்லி முடித்திருந்தார். அதேபோல நித்யானந்தத்தை குற்றஞ்சாட்டும் வீடியோவிலும் நித்யானந்தம் என்று சொல்லி முடிக்கிறார்?
எதற்காக இந்த வீடியோ?
மேலும் இதுவரை இந்த புகாருக்கு நித்யானந்தா எந்த பதிலும், மறுப்பும் சொல்லாதது ஏன் என்றும் தெரியவில்லை. எனவே இந்த வீடியோவை தற்போது சீடர் வெளியிட வேண்டிய அவசியம் தெரியவில்லை. பரபரப்புக்காக வீடியோ வெளியிடப்பட்டதா, அல்லது பெண்களை போல ஆண்களும் நித்யானந்தாவிடம் உறவில் இருக்கிறார்கள் என்பதை விளம்பரப்படுத்த வீடியோ வெளியிடப்பட்டதா என தெரியவில்லை.