சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"செத்து போ.. யார்கூட டான்ஸ் ஆடுனே".. கடைசி நேரத்தில் ரூமில் நடந்தது என்ன.. பரபரப்பு தகவல்கள்

சித்ராவின் கணவர் தற்போது ஜெயிலில் உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவின் நடத்தை மீது ஹேமந்த் சந்தேகப்பட்டதுதான், அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் அடிப்படையிலேயே ஹேமந்த் கைதாகி உள்ளார். இது தொடர்பாக ஹேமந்த் போலீசாரிடம் சொன்னதாக வேறு சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.

Recommended Video

    சென்னை: நடத்தையில் சந்தேகம் செத்துப்போ... சித்ரா வழக்கில் ஹேம்நாத் கைது!

    சித்ரா 9-ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே, அது சம்பந்தமான பல சந்தேகங்கள், யூகங்கள், குழப்பங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

    ஒரு பக்கம் விசாரணைகள் நடந்து வந்தாலும், சித்ரா இறந்தது தற்கொலைதான் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னாலும், சித்ரா மரணம் தொடர்பான பல உண்மைகள் மறைந்துகிடப்பதாகவே அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

    சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

     விசாரணை

    விசாரணை

    அதனால்தான், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்... சித்ரா கணவர் ஹேமந்த்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரித்தனர்.. அவர் சொன்ன வாக்குமூலத்தை எல்லாம் பதிவு செய்து கொண்டனர்.. இதனிடையே தன் மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த்தான் காரணம் என சித்ராவின் அம்மா விஜயா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அவர்களிடம் ஆர்டிஓ விசாரணையும் நடந்து முடிந்த நிலையில், ஹேமந்த் பெற்றோரிடமும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கைது

    கைது

    இந்த சமயத்தில்தான், நேற்றிரவு ஹேமந்த் கைதானார்.. சித்ராவின் நடத்தை மீது இவருக்கு சந்தேகம் இருந்துள்ளது.. ஆரம்பத்தில் காதலுக்காக உயிரையே தருவது போல, கையை அறுத்து கொண்டவர் ஹேமந்த்.. சித்ராவுக்கு ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கிலும் 4 மணி நேரம் அவருக்காக காரிலேயே காத்து கிடந்தவர்.. எனினும் நாளடைவில்தான் சித்ரா மீது சந்தேகம் இவருக்கு அதிகமானதாக கூறப்படுகிறது.

    டான்ஸ்

    டான்ஸ்

    சீரியலில் நெருக்கமான காட்சி நடித்தது முதல் இது அதிகமாகிவிட்டது.. கல்யாணம் ஆன முதல் நாள், ஒரு ரியாலிட்டி ஷோவில் சித்ரா பங்கேற்றுள்ளார்.. அங்கு சக நடிகர்களுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.. நடிகர்களுடன் சித்ரா டான்ஸ் ஆடினதுதான் கணவர் ஹேமந்த்திற்கு பிடிக்கவில்லையாம்.. திருமணம் நடந்த அன்றே, எந்த நடிகருடன் டான்ஸ் ஆடினாய் என்று கேட்டு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

     செத்து போ

    செத்து போ

    அதேபோல, தற்கொலை செய்த 9-ம் தேதி அன்றும், ஷூட்டிங் சென்றுவிட்டு வந்த சித்ராவிடம், மறுபடியும் யாருடன் டான்ஸ் ஆடினாய் என்று கேட்டுள்ளார்.. இதுதான் தகராறாக வெடித்துள்ளது என்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் அந்த தகராறு முற்றியதில் "செத்து போ" என ஹேமந்த் சொன்னதால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.

    English summary
    Whats the actually problem between Chitra and Hemanth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X