நகைக்கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் உள்ள பெரும் ஆபத்து.. சட்ட நிபுணர்
Recommended Video
சென்னை: தங்கம் இந்தியாவில் உள்ள பலருக்கும் மகிழ்ச்சியான விஷயம் அல்ல. ஆனால் அது ஒரு முதலீடு. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மக்கள் நகைக்கடைகளில் தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து மாதத் தவணை கட்டி வருகிறார்கள். ஆனால் இதில் உள்ள ஆபத்தை அடையாளம் காண்பது என்பதே இப்போது சாமானியர்களுக்கு முன்பு உள்ள மிகப்பெரிய சவால்.
நாட்டின் உள்ள பெரும்பாலான ஏழை மக்களின் கனவு என்பது தங்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு முதலீடாக சேர்த்து வைக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்களால் தங்கத்தை ஒரே நேரத்தில் 30 ஆயிரம் 50 ஆயிரம், ஒரு லட்சம் கொடுத்து வாங்குவது என்பது இயலாத காரியம்.
இதை உணர்ந்த தங்க நகை விற்பனை கடைகள் அவர்களுக்காக தங்க நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால் அப்படி அறிவிக்கும் நிறுவனங்களில் பணத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் நிறுவனங்கள் எவை என்பதை தேர்ந்தெடுப்பது என்பது இப்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ரூபி ஜூவல்லரி
ஏனெனில் சென்னையில் நாதெல்லா சம்பத்து செட்டி மற்றும் ரூபி ஜூவல்லரி ஆகிய நகைக்கடைகளில் கோடிக்கணக்கில் மக்கள் சேமிப்பாக பணத்தை கட்டி இழந்தனர். பெங்களூருவில் ஐஏஎம் ஜுவல்லரியில் இதேபோல் பல ஆயிரம் கோடி பணத்தை மக்கள் இழந்தனர். மும்பையில் உள்ள குட்வின் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் தங்களிடம் பணம் கட்டியவர்களுக்கு நகைகளை தராமல் ஏமாற்றியது.
அவதார் ஜுவல்லர்ஸ்
சமீபத்தில் கேரளாவில் துஞ்சத் ஜுவல்லர்ஸ் மற்றும் அவதார் ஜுவல்லர்ஸ் ஆகியவையும் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டியவர்களுக்கு பணத்தையோ அல்லது நகையையோ தராமல் நஷ்டத்தை சந்தித்தன. இதனால் சிறு முதலீட்டாளர்கள் பணத்தை இழந்து பெருமளவு தவித்தனர்.
பாதுகாப்பு இல்லை
ஒரு நகை வியாபாரி திவாலாகும்போது அல்லது ஏமாற்றும்போது முதலீட்டாளர்களுக்கு என்ன நடக்கும்? "ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனம் கலைக்கப்பட்டால் முதலீட்டாளர்களுக்கு(மக்களுக்கு) இந்த தங்கத் திட்டங்களில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. சிறிய முதலீட்டாளர்கள் பொதுவாக குறைந்த பட்சம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு கீழ் தான் இருக்கும். இது திவால் குறியீட்டின் கீழ் வராது. எனவே பாதுகாப்பற்ற கடனாக மட்டுமே கருதப்படும், அதிகபட்சமாக முன்கூட்டியே நடக்கும் வர்த்தகமாக மட்டுமே கருதப்படும் "என்று கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
100 கோடி தாண்டினால்
"செபி (செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா) வழிகாட்டுதல்கள் எந்தவொரு திட்டத்திலும் டெபாசிட் ரூ .100 கோடியைத் தாண்டினால், அது ஒரு கூட்டு முதலீட்டு திட்டமாக மாறும். அதற்காக, உங்களுக்கு செபியின் ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல் பல நிறுவனங்களுக்கு கிடைக்காது,"என்று அவர் கூறினார்.
முதலீடு திரட்டலாம்
சட்ட நிபுணர் ஒருவர் தங்க சேமிப்பு திட்டங்கள் குறித்து கூறுகையில், ஒரு சில தங்கத் திட்டங்கள் மட்டுமே சட்டபூர்வமானவை என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குத் தெரியாது. நிறுவனம் பொது அல்லது தனியார் வரையறுக்கப்பட்டதா, ஒரு கூட்டு அல்லது தனியுரிமையா என்பதைக் கண்டறிவது முக்கியம். "ஒரு பொதுத்துறை நிறுவனம் பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்க முடியும். நிறுவனங்கள் சட்டம் 2013 அவ்வாறு செய்வதற்கான சட்டரீதியான அதிகாரத்தை வழங்குகிறது. வருமானத்தில் 12.5% வரம்பு உள்ளது. மேலும், அத்தகைய நிறுவனம் பெறக்கூடிய மொத்த வைப்புத்தொகை நிறுவனத்தின் நிகர மதிப்பில் 25% ஆக இருக்கும் "என்றார்.
சேமிப்பு முதலீடுகள்
கோல்டு ஸ்மித் தொடங்கி தனிஷ்க் வரை ஏராளமான கார்ப்பரேட் தங்க விற்பனை நிறுவனங்கள் தங்க நகை சேமிப்பு திட்டங்களை நடத்தி வருகிறார்கள். டாடாவின் தனிஷ்க் நிறுவனம் தங்க நகை சேமிப்பு திட்டம் மூலம் 2018-19 நிதியாண்டில் ரூ .1,273 கோடி வைப்புத்தொகையை ஈட்டியுள்ளது, இது 2017-18 ஆம் ஆண்டில் ரூ .1,041 கோடியிலிருந்து அதிகரித்துள்ளது என்று அதன் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்படாத பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸ் 30 வருடங்களாக தங்க நகை சேமிப்பு திட்டங்களை நடத்தி வருகிறது.
புதிய திட்டம்
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி எஸ் கல்யாணராமன் கூறுகையில், "திருத்தப்பட்ட நிறுவனங்கள் சட்டம் ஏப்ரல் 1, 2014 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் திட்டங்களை மூடுவதற்கு நாங்கள் தொடர்புகொண்டு அவர்களின் பணத்தை திருப்பித் தந்தோம். ஜூன் 15, 2016 அன்று நாங்கள் ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (public limited) மாற்றும் வரை, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எந்த வருமானத்தையும் தராத ஒரு திட்டத்தை நாங்கள் இயக்கினோம். அதன் பிறகு 2016 ஆகஸ்டில் தங்க நகை திட்டத்தின் காலம் மற்றும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் வருமானம் / நன்மை ஆகியவற்றின் அடிப்படையில், நிறுவனங்கள் சட்டத்திற்கு இணங்க ஒரு திட்டத்தை தொடங்கினோம்" என்றார்.
நம்பகமான திட்டங்கள்
கம்பெனிகள் சட்டத்தின் விதி 2 ஐப் பயன்படுத்தி வைப்புத்தொகையை எடுக்கும் தனியார் வரையறுக்கப்பட்ட (Private limited) நிறுவனங்களும் உள்ளன. சில புகழ்பெற்ற நகை விற்பனையாளர்கள் தனியார் நிறுவனங்களாக இணைக்கப்பட்டு நம்பகமான தங்கத் திட்டங்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
திருப்பி தர வேண்டும்
இந்நிலையில் "தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் (Private limited) பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகையை ஏற்க முடியாது. எனினும் அவர்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கான முன்னேற்றங்களுக்காக முதலீடு எடுக்கலாம், அதற்காக பொருட்கள் அல்லது பணத்தை 365 நாட்களுக்குள் எந்தவொரு வருமானமும் வட்டியும் இல்லாமல் திருப்பித் தர வேண்டும் "என்று சட்ட நிபுணர் தெரிவித்தார்.
நிபுணர்கள் எச்சரிக்கை
தங்க நகை சேமிப்பு திட்டங்களை பொது (public limited) அல்லது தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக (Private limited) பதிவு செய்யப்படாத நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அவர்களின் திட்டங்களில் முதலீடு செய்தால் பாதுகாப்பு என்பது சட்டத்தில் கேள்விக்குறியாக உள்ளது என்றும் சட்ட நிபுணர் கூறினார்.