அடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்?
சென்னை: திமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ந் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் அதிமுகவின் பொதுக்குழு எப்போது கூடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கோஷ்டி பூசல்களால் அதிமுக பொதுக்குழு கூடுவதில் இழுபறி இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் அக்டோபர் 6-ந் தேதி கூட இருக்கிறது. வழக்கமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுக்குழு கூடுவது வழக்கம்.
நாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை
அறிவாலயத்தில் இல்லை
இம்முறை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் கூடக் கூடிய பொதுக்குழு கூட்டம் என்றாலும் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியிருக்கிறது.
ஒற்றை தலைமை கோரிக்கை
அதிமுகவைப் பொறுத்தவரையில் இன்னமும் இரட்டை தலைமையுடன்தான் கட்சி செயல்படுகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஈபிஎஸ் தரப்பு மும்முரம்
அதிமுகவில் மீண்டும் ஐக்கியமான ஓபிஎஸ் தரப்பு, கட்சிக்கு தலைமை ஏற்பதில் முனைப்பு காட்டியது. ஆனால் ஈபிஎஸ் தரப்பு தமது ஆதரவாளர்களைத் தக்க வைப்பதிலும் எதிர்முகாம் இருப்போரை இழுப்பதிலும் அத்தனைவித வித்தைகளையும் களத்தில் இறக்கிவிட்டது.
விரைவில் கூடுமாம்
பொதுக்குழு கூட்டப்பட்டால் தங்களுக்கு எதிராக ஒரு சிறுமுனகலும் இருக்கக் கூடாது என்பது ஈபிஎஸ் தரப்பின் கணக்கு. அதனால் அத்தனை சலசலப்புகளையும் சரிகட்டி வலிமையான நிலை உருவாக்கப்பட்ட பின்னர் அதிமுகவின் பொதுக்குழு கூடும் எனவும் கூறப்படுகிறது.