சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது?... தமிழிசை கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: இஸ்ரேல் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்... தமிழிசை வலியுறுத்தல்...

    சென்னை: சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று மு.க. ஸ்டாலின் சொன்னது என்னானது? என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    அதே சமயம், சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்று கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசிடம் தண்ணீர் கேட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    When will Chennai become Singapore? Tamilisai question To Stalin

    குடிநீர் வழங்க கோரி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை நகர மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கக் கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் குடம் இங்கே, தண்ணீர் எங்கே என்று எழுதி, காலிகுடங்களுடன் திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட் தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்

    இந்தநிலையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்... தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்று விட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சிங்கப்பூர் சென்றதிற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? என்று கேள்வி எழுப்பி உள்ள தமிழிசை சௌந்தரராஜன், இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, யாகம் செய்தாலும் யோகா செய்தாலும் எதிர்கட்சியினர் கேலி செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

    English summary
    Tamilisai soundararajan Question To Stalin: When will Chennai become Singapore?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X