திருவாரூர்: அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நாளை கூடுகிறது ஆட்சி மன்றக் குழு
சென்னை
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய நாளை ஆட்சி மன்றக் குழு கூடுகிறது.
கருணாநிதி தொகுதியான திருவாரூருக்கு அவர் மறைந்ததை அடுத்து வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஒரு சவாலாகவே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன.
அதிலும் தனது அப்பாவின் தொகுதியில் திமுகதான் வெற்றி பெற வேண்டும் என திமுக வியூகம் வகுத்து வருகிறது. கூடவே போட்டிக்கு டிடிவி தினகரனின் அமமுக வேறு.
ஆர் கே நகர் இடைத்தேர்தல் போல் திருவாரூர் இடைத்தேர்தலிலும் அமமுகவே வெல்லும் என தினகரன் உறுதி கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இனிதான் தெரியவரும்.
விழித்தெழுங்கள் தீபா.. திருவாரூர் களம் தயார்.. ஆர்.கே. நகரில் விட்டதை இங்காவது பிடியுங்கள்!!!
அதுபோல் அதிமுக வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய அக்கட்சின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நாளை கூடுகிறது.