எவ்வளவு அலங்காரம்.. எத்தனை வேகம்.. சீன அதிபர் வருகைக்காக கலக்கலாக மாற்றப்படும் சென்னை!
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து தற்போது சென்னையில் தீவிரமாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை அடுத்து தற்போது சென்னையில் தீவிரமாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் பிரதமர் மோடியை காஞ்சிபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த ஆலோசனை நடக்க உள்ளது.
யாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி
சென்னை எப்படி
இவரின் வருகையை அடுத்து தற்போது சென்னையை மிக தீவிரமாக தமிழக அரசு அலங்காரம் செய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இறங்கும் ஜி ஜின்பிங் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இதற்காக தற்போது சென்னை விமான நிலையமும், அந்த ஹோட்டலுக்கு செல்லும் சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்
இந்த வழி முழுக்க தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. சாலை ஓரம் இருந்த பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டு சாலை மொத்தமாக சுத்தமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பகுதி முழுக்க புதிய விளக்குகள், புதிய வழிகாட்டும் பலகைகள், சாலை விதிமுறை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை மொத்தம்
இங்கு மொத்தமாக இருக்கும் ஸ்பீட் பிரேக்கர்கள் எல்லாம் நீக்கப்பட உள்ளது. அதேபோல் மெட்ரோ பாலங்கள் மீது ஓவியங்கள் வரையும் பணியும் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பாலம் கீழ், பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் புல் தரைகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டி
அதேபோல் சென்னை கிண்டி முதல் மாமல்லபுரம் வரை உள்ள சாலையும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் ஸ்பீட் பிரேக்கர்கள் நீக்கப்பட்டு, சாலையில் பேட்ச் போடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை முழுக்க புதிய புல் தரைகள் வைக்கப்பட்டு, பூச்செடிகள் அதில் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.