கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் சிஎஸ்கே-டெல்லி வீரர்கள்.. பின்னணியில் 2 காரணங்கள்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மரணமடைந்தார்.
இந்த நிலையில்தான் இன்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.
SPB எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் - மு க ஸ்டாலின்
இதில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களு்ம கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள். எதற்காக கருப்பு பட்டை அணியப்பட்டது என்பதற்கு சென்னை அணியின் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டீன் ஜோன்ஸ் மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக கருப்புப் பட்டை அணிந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.