சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கம்"முன்னு இருந்தால் "ஜம்"முன்னு இருக்கலாம்.. கருணாஸ் அமைதிக்கு இதுதாங்க காரணம்!

Google Oneindia Tamil News

"கம்"முன்னு இருந்தால் "ஜம்"முன்னு இருக்கலாம்.. கருணாஸ் அமைதிக்கு இதுதாங்க காரணம்!

சென்னை: அண்ணே மறந்தும் கூட எதுவும் பேசீராதீங்க. அதுதான் நமக்கு நல்லது என்று கருணாஸுக்கு அவரது கட்சியினர் வாய்ப்பூட்டு போட்டு பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களாம்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் தலைவருமான கருணாஸ், எப்போதும் தடாலடியாக பேசக்கூடியவர். அவரது பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும்.

why karunas is so silent

இந்நிலையில் முதல்வருக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் பேச வேண்டாம் என கருணாசுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் அவரது அமைப்பினர். ஆட்சிக்கு எதிராக பேசி அது எம்.எல்.ஏ.பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என நினைக்கிறார்களாம் முக்குலத்தோர் புலிகள் படையினர்.

எல்லா பக்கமும் அணை கட்டும் பிரச்சினைகள்.. தீவிர ஆலோசனையில் அதிமுக தலைவர்கள்!எல்லா பக்கமும் அணை கட்டும் பிரச்சினைகள்.. தீவிர ஆலோசனையில் அதிமுக தலைவர்கள்!

நிர்வாகிகளின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து விட்டாராம் கருணாஸ். அதனால் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அமைதி காத்து வருகிறார் அவர் என்கின்றனர் கருணாஸின் ஆதரவாளர்கள்.

தனக்கு பதவி தேவையோ இல்லையோ தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு தனது பதவி மூலம் ஆதாயம் கிடைப்பதால், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற முடிவில் உள்ளாராம் கருணாஸ். இருப்பினும் வரும் 23-ம் தேதி தேர்தல் முடிவை பொறுத்து அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இதெல்லாம் அரசியலில் ரொம்ப ரொம்ப சாதாரணமப்பா.. அன்னைக்கே கவுண்டர் மகான் சொல்லிட்டாரே!!

English summary
Mukkulathor Puli Padai leaders have advised Actor and MLA Karunas to keep mum on ADMK affairs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X