A. வீரமணி... H. வீரமணி.. S. வீரமணி.. வெலவெலத்து போன "சீனியர்".. கடுப்பான எடப்பாடியார்.. அட கொடுமையே!
அமைச்சர் வீரமணி ஏன் தோல்வியை தழுவினார்
சென்னை: நோட்டா என்றாலே பாஜக பெயர்தான் நமக்கு வந்துபோன நிலையில், இப்போது அதிமுக பெயரும் வர ஆரம்பித்துள்ளது.. அதற்கு காரணம் அந்த அமைச்சர்தான்..!
இந்த முறை தேர்தலில் பல அமைச்சர்கள் தோல்வியை தழுவினர்.. இவர்கள் எல்லாருமே சீனியர்கள்.. தங்கள் தொகுதியில் இதுவரை செய்து வைத்த நலத்திட்டங்களும், உதவிகளும், அரசியல் செல்வாக்குகளும் எப்படியாவது இவர்களுக்கு ஓட்டுக்களை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண்
இதுபோக, இவர்கள் தொகுதிகளில் சிலபல தாராளங்களை காட்டியதாகவும் தகவல்கள் வந்தன.. அதுமட்டுமல்ல, சொந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யாமல், கூட்டணி கட்சிக்கும் பிரச்சாரத்தில் சொந்த தொகுதிகளிலேயே முடங்கி கிடந்தனர்.
வீரமணி
அப்படி இருந்தும் வீரமணி தோற்று போய்விட்டார்.. திமுகவின் துரைமுருகனும் சரி, வீரமணியும் சரி.. இருவருமே நல்ல நெருக்கத்தில் உள்ளவர்கள்.. இருவருமே மாவட்டங்களின் விஐபிகள்... அசைக்க முடியாத செல்வாக்கை பெற்றிருப்பவர்கள்.. அதனால்தான், இந்த தேர்தலில் துரைமுருகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அவரை எதிர்த்து ராமுவை வேட்பாளராக நிறுத்தினாராம் வீரமணி.
தேவராஜ்
அதேபோல ஜோலார்பேட்டை தொகுதியில், வீரமணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே, தேவராஜ் என்ற வேட்பாளரை கொண்டு போய் நிறுத்தினாராம் துரைமுருகன்.. இருவருமே பலவீனமான வேட்பாளர்கள்.. கடைசியில் இவர்கள் போட்ட கணக்கு, இவர்களுக்கே ரிப்பீட் ஆகி விட்டது.. தட்டுத்தடுமாறி கடைசி நேரத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்..
கோபம்
ஆனால் வீரமணி நிலைமையோ பரிதாபம்.. நோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்று விட்டாராம் இந்த அமைச்சர். இதுதான் அதிமுகவையே ஆடிப்போக வைத்துள்ளது. அதாவது நோட்டாவுக்கு, 1,337 ஓட்டுகள் கிடைத்தது என்றால், நோட்டாவை விட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்று போயுள்ளார்.. இதற்கெல்லாம் என்ன காரணம்? தொகுதி மக்களுக்கு ஏற்கனவே இவர்மீது அதிருப்தி இருந்தது..
அப்செட்
இதுபோக பல்வேறு புகார்கள் எடப்பாடியாருக்கும் சென்றுகொண்டுதான் இருந்தது. அப்போதே செம அப்செட்டில் இருந்த எடப்பாடியார் இப்போது அமைச்சர் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம். வடமாவட்டங்களை, முக்கிய அமைச்சர்களை நம்பிதான் எடப்பாடியார் என்னென்னவோ முயற்சிகளை துணிச்சலாக மேற்கொண்டார்.. ஆனாலும் ஜோலார்பேட்டை சொதப்பலாகிவிட்டது.
3 பேர்
அதுமட்டுமல்ல, இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இந்த தொகுதியில் நடந்துள்ளது.. இங்கு பெயர் குழப்பத்தை ஏற்படுத்தவே வீரமணி பெயரில் மூன்று வீரமணிகள் போட்டியிட்டார்களாம்.. அதில், ஏ. வீரமணி 148, எச். வீரமணி 209, எஸ்.வீரமணி, 217 ஓட்டுகள் என மொத்தம், 574 ஓட்டுகள் பெற்றனர்.
வித்தியாசம்
கடந்த, 2016 தேர்தலில், வீரமணி 82,525 ஓட்டுக்கள் பெற்று, 10,991 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து காட்டினார்.. ஆனால் இந்த முறை 5,874 ஓட்டுகள் அதிகமாக பெற்றும், 1,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் வீரமணியேதான்..!