சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சி தொடங்குவாரோ இல்லையோ? அசால்ட் மா.செ.க்களால் அப்செட் ஆன ரஜினி- பின்னணி இதுதானாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அறிவித்தபடி கட்சியை தொடங்குவாரா இல்லையா? என்பது உறுதியாக தெரியாத நிலையில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ளாததுதான் அவரது ஏமாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Recommended Video

    மீண்டும் மீண்டும் கேட்ட செய்தியாளர்கள்.. அதே வார்த்தையை சொல்லி தப்பித்த ரஜினி.. - வீடியோ

    சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    Why Rajinikanth say Disappointed after Makkam Mandram Meeting?

    இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் வழக்கம் போல போயஸ் கார்டனில் நடுத்தெருவில் நின்று ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தார். அப்போது, மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் தமக்கு ஏமாற்றம் ஏற்பட்டது; அதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

    இன்றும் ஒரு பேட்டி + குழப்பம்.. ரஜினிகாந்த் தெளிவாதான் இருக்கார்.. நாமதான் குழம்பி போயுள்ளோம்!!இன்றும் ஒரு பேட்டி + குழப்பம்.. ரஜினிகாந்த் தெளிவாதான் இருக்கார்.. நாமதான் குழம்பி போயுள்ளோம்!!

    மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தி இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது கட்சி தலைவரின் பொறுப்பை. அதை பொதுவெளியில் ஊடகங்களிடம் ஒரு புலம்பலாக ஒரு தலைவர் முன்வைப்பார்? என்கிற விமர்சனங்கள் ரஜினியை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம்.

    Why Rajinikanth say Disappointed after Makkam Mandram Meeting?

    அப்போது, ஓராண்டுக்கு முன்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வார்டு அளவில் மேற்கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார். அதன்பின்னர் கட்சி தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையும் ரஜினிகாந்திடம் வெளிப்படவில்லை.

    Why Rajinikanth say Disappointed after Makkam Mandram Meeting?

    இதனால் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் மன்ற நிர்வாகிகளும் ஆர்வம் காட்டவில்லை. இன்று திடீரென வந்து அடிப்படை கட்டமைப்புகள் குறித்து கேள்வி கேட்டார் ரஜினி. உள்ளது உள்ளபடியே பல நிர்வாகிகளும் எந்த பணியும் முடிக்கவில்லை என தெரிவித்தனர். இதனால்தான் ரஜினிகாந்த் ஏமாற்றமடைந்தார். இதனைத்தான் ஊடகங்களிடமும் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார் என்கின்றனர்.

    ஆரம்பமே படுஜோருதானப்பு!

    English summary
    Here is the reason behind Rajinikanth's disappointed over Makkal Mandram meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X