பிக்பாஸ் சீசன் 4 போட்டியின் வெற்றியாளர் இவர்தான்! கடுப்பில் தேள் போல் கொட்டும் ரம்யா- பாலா!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 போட்டியின் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன்தான் என சக போட்டியாளர்களின் உறவினர்கள் சொல்லிவிட்டு சென்றதால் பாலாவும் ரம்யா பாண்டியனும் கடுப்பில் ஆரியின் மீது விஷத்தை கக்குகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 4 மற்ற சீசன்களை விட அதிரி புதிரியாய் செல்கிறது. குரூபிஸம், அன்பு, சண்டை, காதல், பாசம் என அனைத்து ரசங்களும் இருக்கின்றன. மொத்தம் 16 போட்டியாளர்கள் தற்போது சுருங்கி 8 ஆக உள்ளனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் சுரேஷ், அனிதா, ரம்யா பாண்டியன், ரேகா, ஷிவானி, ஷனம் ஷெட்டி, ரியோ, அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்டோர் மட்டுமே மக்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தனர்.
பாலாவை தூண்டுவதை நிறுத்தினால் ரம்யாவுக்கு வெற்றி கிட்டும்.. இல்லாட்டி ஆரியின் கிராஃப்தான் உயரும்!
ரியோ, ரம்யா
மற்றவர்கள் புதுமுகங்கள்தான். இதனால் மேற்கண்ட தெரிந்த முகங்களில் ரம்யா பாண்டியன், ரியோவும் மட்டுமே தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ரம்யா பாண்டியனுக்குத்தான் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. என்னதான் ஷனம் ஷெட்டி, ஆரிக்கு ஆர்மிகள் இருந்தாலும் அவர்களை விட இளசுகளின் இளவரசியாக இருந்தார் ரம்யா.
கெட்ட பெயர்
ஆனால் கடந்த சில வாரங்களாக பாலா- ஷிவானி குறித்து பேசுவது, கண்மூடித்தனமாக ஆரியை எதிர்க்க பாலாவுக்கு சப்போர்ட் செய்வது போன்றவற்றை செய்து வருவதால் ஆரிக்கு அசுர பலம் கூடியுள்ளது. இந்த நிலையில் ஆரியின் நிஜ முகத்தை தெரியப்படுத்துகிறேன் என சொல்லிவிட்டு ரம்யா பாண்டியன் கெட்ட பெயர் எடுத்து வருகிறார்.
பாலாவுக்கு சாதகம்
ஆரிக்கும் பாலாவுக்கும் நடந்த சண்டையில் கூட நியாயமே இல்லாமல் பாலாவுக்கு சாதகமாகவே பேசினார் ரம்யா. ஆரியிடம் எப்போதும் நக்கல் நையாண்டி காட்டுவது என முகம் சுளிக்க வைக்கிறார். பாலாவும் ஆரியை தேடி தேடி வம்பிழுக்கிறார். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து நேத்து ஆண்டவர் வியர்த்து விருவிருக்க வைத்துவிட்டார்.
பாலாவுக்கும் ரம்யாவுக்கு கடுப்பு
இதெல்லாம் எதற்காக என பார்க்கும் போது கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சென்ற போட்டியாளர்களின் உறவினர்கள் ஆரிதான் டைட்டில் வின்னராவார் என தெரிவித்தனர். இது பாலாவுக்கும் ரம்யாவுக்கும் கடுப்பை ஏற்படுத்தியது.
ஆரி மீது விஷம்
அதிலும் தன்னை பார்க்க வந்த ரம்யாவின் தம்பி எங்கே என் தலைவன் ஆரி எங்கே என கேட்டு ஓடோடி வந்தார். இது ரம்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை. 90 நாட்களாக தன்னை பார்க்காமல் இருக்கும் தம்பி தன்னை தேடி ஓடி வருவான் என பார்த்தால் ஆரியிடம் செல்கிறானே என்ற கடுப்புதான். அது போல் பாலாவின் நண்பரும் ஆரி குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் கூறிவிட்டார். இதனால்தான் இருவரும் சேர்ந்து ஆரி மீது விஷத்தை கக்குகிறார்கள்.