செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு?
Recommended Video
சென்னை: அமமுகவிலிருந்து திமுகவுக்கு செந்தில் பாலாஜி புறப்பட்ட போது எங்கிருந்தாலும் வாழ்க என கூறிய டிடிவி தினகரன் தங்கதமிழ்ச் செல்வன் மீது பாய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றால் அது தற்போது டிடிவி தினகரனுக்கும் தங்கதமிழ்ச் செல்வனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால்தான்.
தங்கதமிழ்ச் செல்வன் நேற்று பேசிய விவகாரம் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு தினகரனை தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
எல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்
ஊடகங்கள்
இந்த நிலையில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவர் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் ஒன்றும் எங்கள் பலம் இல்லை. ஊடகங்கள்தான் அவரை பெரிய ஆள் ஆக்குகின்றன.
வாடிக்கை
தங்கதமிழ்ச் செல்வன் முன்பு எப்படியிருந்தார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எப்போதும் வேறுபட்டு செயல்படுவது தங்கதமிழ்ச் செல்வனுக்கு வாடிக்கை. என்னிடம் கூறாமல் பேட்டி கொடுப்பார், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என சரமாரியாக விளாசினார் தினகரன்.
திமுகவுக்கு சென்ற செந்தில் பாலாஜி
இதே தினகரன், செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்ற போது எங்கிருந்தாலும் வாழ்க என கூறிய நிலையில் தற்போது தங்கதமிழ்ச் செல்வனுக்கு மட்டும் பாய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்ற போது அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. டிடிவி தினகரனை அதிருப்திக்குள்ளாகும் செயல்களில் அவர் ஈடுபடவே இல்லை.
துரோகி
அதே வேளையில் தினகரன் எதிரியை கூட மன்னிப்பார, ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார் என்பார்கள். அதற்கேற்ப செந்தில் பாலாஜியோ எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்தார். ஆனால் தங்கதமிழ்ச் செல்வனோ தனக்கு துரோகம் ஏற்படுத்தியதாக கூறப்படும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வந்தன. இதுதான் தினகரனின் பாரபட்சத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.