பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க?... ஓ.பி.எஸ் பதில் இது தான்
Recommended Video
சென்னை: பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு விருந்தளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.
டெல்லி செல்வதற்கு முன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக்கணிப்புகள் மக்களின் முடிவை பிரதிபலிக்கிறது என்றும், கருத்துக்கணிப்புகளை 'கருத்து திணிப்பு' என கூறுவது அவரவர் விருப்பம் எனவும் ஓபிஎஸ் கூறினார்.
அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அளித்துள்ள ராஜினாமா கடிதம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.