சுஜித்தை ஈஸியாக மீட்க ஹாட் வாட்டர் பலூன் டெக்னாலஜி.. வைரலாகும் வீடியோ.. பரிசீலிக்கலாமே அதிகாரிகள்
Recommended Video
சென்னை: 2 வயது சிறுவன் சுஜித்தை, காப்பாற்றுவதற்கு ஹாட் வாட்டர் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம், என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு சிறிய கம்பியில் பலூனை கட்டி சிறுவனுக்கு கீழ்ப்பகுதி வரை கொண்டு சென்று விட்டு, மேலே இருந்த அந்த பலூனை, அந்தக் கம்பியில் இணைக்கப்பட்டுள்ள டியூப் மூலமாக காற்று செல்ல ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது, அந்த பலூன் விரிவடையும். விரிவடைந்த பிறகு பலூனை மேலே தூக்கினால், குழந்தையும் மேலே எழுந்து வருவார் என்று கூறுகிறது அந்த பதிவு.
மேலும், இதுகுறித்து தகவல் தெரிவிக்க யாரை அணுகவேண்டும் என்று தெரியவில்லை, இணையதளத்தில் பல்வேறு பிரமுகர்களின் தொலைபேசி எண்ணை தேடிப்பார்த்தும், அனைத்துமே வேலை செய்யவில்லை என்றும் கூறுகிறார் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளவர்.
இது ஒரு பள்ளி மாணவன் முன்பே கூறிய யோசனைதான். அந்த சிறுவன் முதலில் 12 அடி ஆளத்திலேதான் இருந்தான். pic.twitter.com/bFxPvfKZly
— மகாராஜா ® (@maharaja_2020) October 26, 2019
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதைய நிலையில் 100 அடிக்கும் கீழே ஆழ்துளை கிணற்றுக்குள் சென்றுவிட்ட சுஜித்தை, காப்பாற்ற முடியுமா? வேறு தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்த வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்களா, என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
இது ரொம்ப கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல
ஒருவேளை ஆழம் குறைவாக இருந்தபோது இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இருந்தால், எளிதாக மீட்டு இருக்கலாமோ என்ற கேள்வியும் மக்களிடம் எழுகிறது. ஆனால், நடைமுறையில் உள்ள சிக்கல் என்ன என்பதை அதிகாரிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும். இப்போதும் தாமதமாகி விடவில்லை. இந்த தொழில்நுட்பம் பயன்படும் என்றால் அதை அதிகாரிகள் பரிசீலித்து பார்க்கலாமே என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.