வாழ்ந்து காட்டு பெண்ணே!.. சமூக வலைதளங்களில் கவுசல்யாவிற்கு குவியும் வாழ்த்து!
உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
சாதி ஆணவ படுகொலையால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு கவுசல்யா நீதி மூலம் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
[கோவையில் பறை இசைக் கலைஞரை மறுமணம் செய்த உடுமலை கவுசல்யா ]
|
மனிதாபிமானம் போதும்
இவர் '' கவுசல்யா மறுமணத்தை ஆதரிக்க பெரியார படிக்கனும்னு அவசியம் இல்லை குறைந்தபட்ச மனிதாபிமானம் இருந்தாலே போதும் ...வாழ்த்துகள் தோழி'' என்றுள்ளார்.
|
மகிழ்ச்சியான செய்தி
இவர் ''மிகப்பெரும் மகிழ்ச்சியான செய்தி சகோதரி கவுசல்யா மறுமணம். கவுசல்யா - சக்தி வாழ்க இணையர்.'' என்றுள்ளார்.
சந்தோசமாக
சந்தோசமாக பறையிசைக்கும் கவுசல்யா!
ஆணவக்கொலை மாற்றம்
இவர் ''மறுமணத்தையே இன்னும் ஏற்காத சமூகம் இது. ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட பெண் மறுமணம் செய்வதை முற்றிலுமாக ஏற்காது.விமர்சனத்தை புறந்தள்ளுங்கள். வாழ்த்துக்கள், என்றுள்ளார்.
அருமை மக்களே
இவர் ''அருமை அருமை... வாழ்த்துகள் கௌசல்யா'' என்றுள்ளார்.
சமூகம் அநீதி
இவர் '' தனக்கெதிராக இந்த சமூகம் கட்டவிழ்த்து விடுகிற அத்தனை வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார். வாழ்ந்து காட்டி பதில் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.
பெருமகிழ்ச்சி..❤️ நிமிர்வு குழு ஒருங்கிணைப்பாளர் பறையிசை கலைஞர் சக்தியை மறுமணம் செய்துகொண்ட தோழர் கெளசல்யாவுக்கு என் அன்பும், வாழ்த்துக்களும்.'' என்றுள்ளார்.
திராவிடம் என்ன செய்தது
இவர் ''திராவிடம் என்ன செய்தது?? இதைத்தான் செய்தது...'' என்றுள்ளார்.
பேரன்பு மக்களே
இவர் ''பேரன்பும், பெருமகிழ்வும்'' என்றுள்ளார்.
தொடரும்
இவர் ''வாழ்த்துகள் தோழர் Gowsi Shankar! உங்கள் இணையருடன் சேர்ந்து உங்கள் சாதியொழிப்பு சமூகப்பணி தொடரட்டும்!'' என்றுள்ளார்.