நல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்
கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்
சென்னை: ஆரம்பத்தில் நல்லவராகத்தான் இருந்தார் வனிதா.. திடீரென அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுவிடவும்தான் இப்படி ஒரு காரியத்தில் துணிந்து இறங்கி இருக்கிறார்.. இப்போது போலீசில் சிக்கி கொண்டு அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.
சென்னையில் பல இடங்களில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல்கள், புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
குறிப்பாக கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் டூவீலரில் கஞ்சா சப்ளை நடப்பதாக சொல்லவும் அதன் அடிப்படையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. கிண்டி, வேளச்சேரி ரோடுகளில் போலீசார் மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்".. ஜெயக்குமார் அழைப்பு
கஞ்சா
அப்போதுதான் வனிதா சிக்கினார்.. டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.. ஸ்விக்கி ஊழியர் போல, சாப்பாட்டை டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தார்.. ஸ்விக்கி ஊழியர் என்றாலும் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது.. அதனால் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சாப்பாட்டு பையில், சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்தனர்.
ஸ்விக்கி
அப்போதுதான் பெயர் வனிதா என்பதும், 32 வயசாகிறது என்றும் மடிப்பாக்கத்தில் வசித்து வருவதாகவும் சொன்னார்.. ஸ்விகியில் உணவு டெலிவரி செய்பவராக வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்படியே பார்ட் டைம் ஆக கால் டாக்சியும் ஓட்டி வந்துள்ளார்.. அப்போதுதான் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பெண் கஞ்சா சப்ளை செய்பவராம்.
கடத்தல்
அதனால் வனிதாவை தன் தொழிலுக்கு வருமாறு பேசி சம்மதிக்க வைத்துள்ளார். ஸ்விக்கி டிரஸ்ஸிலேயே கஞ்சாவை மறைத்து கொண்டு போனால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலேயே இவ்வளவு நாள் கஞ்சா கடத்தினாராம் வனிதா.
கஸ்டமர்கள்
கோயம்பேடு பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, கஸ்டமர்களுக்கு தந்து வந்துள்ளார்.. இவரிடம் கஞ்சா வாங்க ஒரு பெரிய கஸ்டமர் கூட்டம் இருக்கிறதாம்.. அவர்களில் பெரும்பாலானோர் கிண்டி பகுதியில்தான் உள்ளனராம்.. இப்போது வனிதாவிடம் 2 செல்போன், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.