சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பின்னாலிருந்து சீட் வழியாக கையை நுழைத்து.. அசிங்கமாக நடந்து கொண்டார்.. கண்டக்டர் மீது பெண் பாய்ச்சல்

அரசு பஸ் கண்டக்டர் மீது பெண் புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்டக்டர்-வீடியோ

    சென்னை: "அந்த கண்டக்டர் என் மார்பகத்தை அழுத்தி.. பாலியல் தொல்லை தந்தாரு" என்று இளம்பெண் ஒருவர் பகிரங்கமாக புகார் சொல்லி உள்ளார்.

    கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ்ஸில், இளம் பெண் ஒருவருக்கு கண்டக்டர் ராஜூ நடுராத்திரி.. பாலியல் தொல்லை தந்துள்ளார். இதை பற்றி சம்பந்தப்பட்ட பெண் தமிழ்செல்வி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்செல்வி பேசும்போது: "நான் பெரம்பூர்ல இருக்கேன். மன்னார்குடி போறதுக்காக நான் கோயம்பேட்டில் பஸ் ஏறினேன். வள்ளலார் சன்மார்க்கத்தில் நான் இருக்கிறேன். 5 நாளா அன்னதானம் தந்து வருகிறேன். விளக்கு ஒன்று வாங்கறதுக்காக நான் ஊருக்கு போனேன்.

     நடு ராத்திரி.. ஓடும் பஸ்சில்.. பின் சீட் வழியாக கையை விட்டு.. கண்டக்டரின் அட்டகாசம்.. பெண் அலறல் நடு ராத்திரி.. ஓடும் பஸ்சில்.. பின் சீட் வழியாக கையை விட்டு.. கண்டக்டரின் அட்டகாசம்.. பெண் அலறல்

    கண்டக்டர் ராஜு

    கண்டக்டர் ராஜு

    இதுக்காகத்தான் கோயம்பேட்டில் ராத்திரி 12 மணிக்கு பஸ் ஏறினேன். செங்கல்பட்டு தாண்டி பஸ் போயிட்டே இருந்தது. அப்போ எனக்கு குளிரா இருந்தது. ஜன்னலை மூடலாம்னு பார்த்தால், அது உடைஞ்சி இருந்தது. பின்னாடி இருந்து ஒரு குரல், என்னங்க லாக் பண்ணனுமா?ன்னு கேட்டது. அவர்தான் கண்டக்டர் ராஜு.

    தூங்கிவிட்டேன்

    தூங்கிவிட்டேன்

    அதுவரைக்கும் அவர் என் சீட்டுக்கு பின்னாடி இருக்கிறதே எனக்கு தெரியாது. நான் ஆமாம்னு சொன்னதும், கதவை மூட வந்தார். நான் கொஞ்ச நேரத்துல அசந்து தூங்க ஆரம்பிச்சேன். அப்பதான் என் செஸ்ட் பிடிச்சு, அமுக்க வந்தது போல இருந்தது. நான் முதலில், ஜன்னலின் கைப்பிடிதான் அங்கே இடிக்குதுன்னு நினைச்சேன். அதனால அந்த கைப்பிடியை கீழே இறக்க நினைச்சேன்.

    கும்பகோணம்

    கும்பகோணம்

    அப்பதான் கைப்பிடி ரொம்ப சாஃப்ட்டா இருந்தது. இவ்ளோ சாப்ஃட்டா இருக்கேன்னு பார்த்தால், கண்டக்டருடைய கை அது. அப்படியே அவன் கையை பிடிச்சு அடிக்க போய்ட்டேன். டீ குடிக்க கூட வண்டியை நிறுத்தல. கோயம்பேட்டில இருந்து கும்பகோணம்வரை டிரைவரும் மாத்தல. நான் உடனே இறங்கி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணேன்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    "ஏய் என்ன ஓவரா பண்றே.. உனக்கென்ன கம்ப்ளைன்ட் தானே தரணும்? ஒழுங்கா என் மேல கம்ப்ளைன்ட் குடுத்துட்டு போ. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது"ன்னு கண்டக்டர் அங்க வந்தும் என்னை மிரட்டறார். இந்தமாதிரி பாலியல் தொல்லை அதிகமாக இருக்கு. கும்பகோணம் மட்டுமிலை.. தமிழ்நாட்டில இருககிற பஸ் ஸ்டாண்ட், கோயில்ன்னு எல்லா இடத்துலயுமே பாலியல் தொல்லை இருக்கு. இவங்களுக்கு எல்லாம் ஒரு விழிப்புணர்வா இருக்கணும்னு தான் நான் இங்கே வந்து மனு தந்திருக்கேன்" என்றார்.

    English summary
    Young Woman complaint against Gov Bus Conductor Raju and She requested that women come forward to publicly complain about sexual harassment
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X