ஐ மிஸ் யூ.. என் போன் ஹேங் ஆயிருச்சு.. வேற வாங்கிட்டுத்தான் வருவேன்.. கதறி குமுறி அழுத தனம்!
டிக்டாக் ஆப் செயலிழந்ததால் பெண் ஒருவர் கதறி அழுதுள்ளார்
Recommended Video
சென்னை: "என் போன் ஹாங் ஆயிடுச்சு.. வேற போன் வாங்கணும்.. அதுவரைக்கும் நான் டிக் டாக் பண்ணாம எப்படி இருக்க போறேன்னு தெரியாது.. ஐ மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்" என்று பெண் ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. ஒரு சில நேரங்களில் இதே டிக்டாக் வீடியோ ஆப்பினால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதையும் ஏற்று கொள்ள வேண்டி உள்ளது. அதேபோல, சில குடும்ப உறவுகள் சிதைந்து போகவும், பிரிந்து போகவும் இந்த டிக்டாக் ஆப் காரணமாகியும் வருகிறது.
ரிப்பேர்
இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. இதை எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை. தனம் என்ற பெண் டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார். டிக்டாக் என்றால் இவருக்கு உயிர் போல தெரிகிறது.. எந்நேரமும் செல்போனும் கையுமாகவே இருந்திருப்பாரோ என்னவோ, இவருடைய செல்போன் திடீரென ரிப்பேர் ஆகி உள்ளது. அதனால் வேற போன் வாங்கும்வரை டிக்டாக் செய்ய முடியாமல் போகுமே என்ற கவலை இந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் போட்டு தேம்பி தேம்பி அழுதுள்ளார். அதில் அவர் பேசி உள்ளதாவது:
ஹேங் ஆயிடுச்சு
"ஹாய் பிரண்ட்ஸ்.. நான் இதுவரைக்கும் 350 டிக் டாக் வீடியோ போட்டிருக்கேன்.. 30 ஆயிரம் லைக் தந்திருக்கீங்க.. 1200 பேர் ப்ரண்ட் லிஸ்ட்ல இருக்கீங்க.. இப்போ என்ன பிரச்சனைன்னா, நான் வெச்சிட்டு இருந்தது ரெட்மீ போன்.. அது அது ஹெவி லோடு தாங்க முடியாம ஹேங் ஆயிடுச்சு, அதனால என்னால டிக் டாக் ஓபன் பண்ண முடியாது. இனிமே நான் வேற ஒரு போன் வாங்கிட்டுதான் உங்கள எல்லாம் பார்க்க முடியும். ஐ மிஸ் யு ஃப்ரண்ட்ஸ்.. எல்லாரும் பார்த்து பத்திரமா இருங்க.
டிக்டாக்
எனக்கு லைக் போட்டவங்க, என் வீடியோவை பார்த்தவங்க.. எல்லாருக்கும் ரொம்ப தேங்ஸ்.. என் வாழ்க்கையில ஒரு என்டர்டெயின்மென்ட்டுக்குத்தான் டிக்டாக் உள்ளே வந்தேன்.. அந்த என்டர்டெயின்மென்ட்கூட எனக்கு இப்போ இல்லாம போச்சு.- நான் வேற போன் வாங்கிட்டு திரும்பவும் வர ஒரு மாசம் ஆகும்" என்று சொல்லி அழுகிறார்.
நட்புகள்
உண்மையிலேயே நாலு சுவற்றுக்குள் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு, வெளி உலகம் அறியாமல் புழுங்கி கிடக்கும் பெண்களுக்கு டிக்டாக் ஆப் நல்ல மாற்றத்தையும், திறமைகளைவெளிப்படுத்தும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறதை ஒப்புக் கொண்டுதான ஆக வேண்டும். இதன்மூலமும் நல்ல நட்புகள் மலர்ந்து வருகின்றன என்பதும் நல்ல விஷயம்தான். அந்த வகையில், இந்த பெண்ணின் உணர்வும் மதிக்கப்பட வேண்டியதாக இருந்தாலும், கதறி அழும் அளவுக்கு இது இவ்வளவு பெரிய விஷயமா என்ற சந்தேகமும் நமக்கு எழுகிறது!