பல்லாவரத்தில் பெண் தற்கொலை.. வேலையிழந்த கணவர் வேலைக்கு அனுப்ப முயன்றதால் விபரீதம்
சென்னை: பல்லாவரம் அருகே கப்பலில் பொறியாளராக உள்ளவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவா் வேலையை இழந்ததால் மனைவியை வேலைக்கு அனுப்ப சொன்னதால் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணி பெரியாா்நகரில் வசிப்பவா் ஜெயசந்திரன் (38). இவருடைய மனைவி திவ்யா(35). இவா்களுக்கு 7 வயது மகள், 4 வயது மகன் உள்ளனா். ஜெயசந்திரன் தனியாா் கப்பலில் இன்ஜினியராக பணியாற்றி வந்தாா்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக இவருக்கு வேலை இல்லை. இதனால் மனைவி திவ்யா எம்காம் பட்டதாரி என்பதால் அவரை எதாவது வேலைக்கு அனுப்ப ஜெயசந்திரன் முயற்சித்தாா்.
தட்டார்மடம் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. பரபரப்பு
பிரச்சினை
திவ்யாவிற்கு அதில் விருப்பம் இல்லை. இதனால் கணவன்,மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. நேற்று இரவும் இவா்களுக்குள் சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு திவ்யா படுக்கை அறையில் தூக்கில் தொங்கினாா்.
திவ்யா உயிரிழப்பு
உடனே ஜெயசந்திரன் கயிறை அறுத்து அவரை காப்பாற்றி, குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றாா். அங்கு திவ்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
சந்தேக மரணம்
இதையடுத்து சங்கா்நகா் போலீசாா் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனா். அதோடு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி
உண்மையிலேயே திவ்யா வேலைக்கு செல்ல பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாரா. அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.