சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாட்ஜில்.. நிர்வாண நிலையில் பெண் கொடூர கொலை.. ஒருவர் கைது.. சென்னையில் பயங்கரம்!

சென்னை லாட்ஜில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் பயங்கரம்! கள்ள உறவால் பெண் கொலை

    சென்னை: லாட்ஜில் பெண்ணை அடித்து கொன்று, நிர்வாணமாக, ரத்தம் சொட்ட சொட்ட தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பெரியகாவனம் ஆத்தங்கரை தெருவை சேர்ந்த தம்பதி ரூபேஷ் - மோகனா. ரூபேஷ் ரயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். மோகனா ரயில்வே துறையில் கொருக்குப்பேட்டை யார்டில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள்.

    ஆனால் கணவர், குழந்தைகளுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வசித்து வந்துள்ளார் மோகனா. திட்டக்குடியை சேர்ந்த வீராசாமி என்பவர் திருத்தணியில் தங்கியிருந்து, சென்னை ரயில்வே கேண்டீனில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். மோகனா அதிகாலையே டியூட்டிக்கு வந்துவிடுவதால் கேண்டீனில் சாப்பிட வருவது வழக்கம்.

    முதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி! முதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி!

    கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    அப்போதுதான் மோகனாவுடன் வீராசாமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதல் வரை வளர்ந்துவிட்டது. மோகனாவுக்கு வயசு 35, வீராசாமிக்கு வயது 32. இந்நிலையில், ரெண்டு பேரும் பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து நேற்று முன்தினம் தங்கி உள்ளனர்.

    சந்தேகம்

    சந்தேகம்

    ஆனால் அன்று மாலை, வீராசாமி மட்டும் வெளியே கிளம்பி சென்றுவிட்டார். அவர் கிளம்பி சென்றபோது பதட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மோகனா மட்டும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த லாட்ஜ் மேனேஜர், ரூம் கதவை தட்டி பார்த்தார். திறக்கவே இல்லை. அதனால் மாற்று சாவியை வைத்து திறந்து கொண்டுஉள்ளே போனால், மோகனா நிர்வாண கோலத்தில் ரத்தம் சொட்ட சொட்ட தூக்கில் தொங்கவிடப்பட்டு சடலமாக கிடந்தார்.

    விசாரணை

    விசாரணை

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மேனேஜர், உடனடியாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது,தேவேந்திரன் என்ற போலி அடையாள அட்டையை வீராசாமி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதனால் தப்பிச்சென்ற வீராசாமியையும் தேட ஆரம்பித்தனர்.

    கணவர் ரூபேஷ்

    கணவர் ரூபேஷ்

    இந்த சமயத்தில், மோகனாவின் ஹேண்பேகில் செல்போன் அடித்துக் கொண்டே இருந்ததால், போலீசார் அதை எடுத்து பேசினர். அது ஆண் குரலாக இருக்கவும் யார் என்று விசாரித்ததில், கணவர் ரூபேஷ் என்று தெரியவந்தது. மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும் ரூபேஸ் அடிக்கடி மோகனாவிடம் போனில் பேசி வந்திருக்கிறார். இவரது தகவலை வைத்து தான் கொலையாளியை போலீசாரால் எளிதாக நெருங்க முடிந்தது.

    கைது

    கைது

    கொலைசெய்த வீராசாமி, வெளி மாநிலத்துக்கு தப்பி செல்ல முயன்றபோது, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்ததுடன், அவரிடமிருந்த மோகனாவின் பணம், நகைகளும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், கள்ள உறவு தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த சண்டையில் கழுத்தை நெறித்தும், மர்ம உறுப்பில் அடித்தும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாகவும் வீராசாமி போலீசாரிடம் தெரிவித்தார். பெண்ணை கொலை செய்து நிர்வாணமாக தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Railway Woman staff murdered in Periyamedu lodge due to illegal relationship and one arrested by Chennai Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X