ஆணா? பெண்ணா? இந்த போட்டோவில் உங்களுக்கு என்ன தெரிகிறது சொல்லுங்க! பின்னணியில் இருக்கும் சர்ப்ரைஸ்
சென்னை: பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களும், மக்களின் குணங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்தே ஒருவரின் குணாதிசயத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஒரு புகைப்படத்தில் முதலில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்பதை வைத்தே உங்களின் குணம் என்ன.. நீங்கள் எப்படிப்பட்ட கேரக்டர் கொண்டவர் என்று சொல்லிவிட முடியும். ஒரே புகைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தெரிந்தால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் என்று கூறுவார்கள்.
இந்த செய்தியில் இடம் பெற்று இருக்கும் புகைப்படத்தில் இரண்டு உருவங்கள் உள்ளன.
மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்!
ரொம்ப கஷ்டமான சவால்.. இந்த டி ஷர்ட்டில் எத்தனை ஓட்டைகள் உள்ளன.. டக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!
போட்டோ
ஆம் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைபடத்தில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் படம் உள்ளது. பலருக்கும் முதலில் பார்த்ததும் பெண் படம் தெரியலாம். அதே சமயம் சிலருக்கு ஆண் படம் தெரியலாம். இதில் இருக்கும் வெள்ளை நிற படத்தில் பெண்ணின் முகம் உள்ளது. கருப்பு நிற பகுதியில் ஆண் ஒருவர் சேக்சோபோன் இசைக்கருவி வாசிப்பது போன்ற உருவம் உள்ளது. இதில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.. பார்க்கலாம்!
ஆண் உருவம்
உங்களுக்கு ஒரு ஆணின் உருவம் கையில் சேக்சோபோன் வாசிப்பது போல தெரிந்தால்.. நீங்கள் உங்களுடைய இடது மூளையை அதிகம் பயன்படுத்தும் நபர். இதன் அர்த்தம் நீங்கள் பொதுவாக அதிகமாக சிந்திக்க கூடியவர். எல்லா விஷயங்களையும் ஆராய கூடியவர். நீங்கள் மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் திறன் கொண்டவர். எதை சொன்னாலும் யோசித்து சொல்வீர்கள்.
பெண் உருவம்
உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டு வந்தால் நீங்கள் அவருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவீர்கள். உங்களிடம் குழப்பமாக வரும் நபர்களை பேசி தெளியவைத்து அனுப்பும் குணம் கொண்டவர் நீங்கள். அதுவே உங்களுக்கு இந்த புகைப்படத்தில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால் நீங்கள் அப்படியே எதிர் குணம் கொண்டவர். நீங்கள் வலது மூளையை பயன்படுத்தும் ஆள்.
உங்களுக்கு என்ன தெரிகிறது
நீங்கள் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த கூடியவர். வித்தியாசமான ஐடியாக்களை கொண்டவர். அதேபோல் உங்கள் மனதில் பட்டத்தை செய்வீர்கள். மற்றவர்கள் அட்வைஸ் செய்ய விரும்பா விட்டாலும்.. உங்கள் மனதில் உள்ளதை அப்படியே மற்றவர்களுக்கு சொல்லிவிடுவீர்கள். நீங்கள் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். உங்களை பலர் ஆபத்பாந்தவனாக கருதி இருக்கிறார்கள்.. ம்ம் சொல்லுங்க உங்களுக்கு இந்த போட்டோவில் முதலில் தெரிந்தது என்ன?